Friday, August 7, 2015

இன்சுலினைப் பற்றி அறிந்துகொள்வோம்.- 1. Understanding Insulin - 1



ஒரு பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இருக்கும் சொத்துக்கு கணக்கு வழக்கில்லை. ஆனால் தினமும் கோயிலில் பிச்சை எடுத்து உண்டு வந்தான். காரணம் அவன் பணம் எல்லாம் ஒரு வங்கியில் இருந்தது. வங்கியில் பணம் எடுக்கலாம் என போனால் வாட்ச்மேன் அவனை பணத்தை எடுக்கவிடாமல் துரத்திவிடுகிறார்.

யார் அந்த பரிதாபத்துகுரிய கோடீஸ்வரன்?

நாம் தான்.

சுமார் 70 கிலோ எடையுள்ள ஒருவரை எடுத்துக்கொள்வோம். இது ஒன்றும் அதிக எடை அல்ல, பர்பெக்ட் எடை என கூட சொல்லலாம்.

இவரது உடலில் 1500 கலோரி கிளைகோஜெனாக தேங்கியுள்ளது. உடலுக்கு இந்த 1500 கலோரி கிளைகோஜெனை தொட விருப்பமே இருப்பதில்லை. காரணம் அது எமெர்ஜென்சிக்கு என சேமித்து வைத்துள்ள பணம்.

அடுத்ததாக நம் உடலின் செல்களுக்குள் எட்டு கிலோ புரதம் (சுமார் 25,000 கலோரி) உள்ளது. இது கிஸான் விகாஸ் பத்ராவில் உள்ல பணம் போல. இதை உடல் எடுக்கவே எடுக்காது. எடுக்க உடல் அனுமதிக்கவும் அனுமதிக்காது. எடுக்க ரொம்ப சிரம்படவேண்டும் என வைத்துக்கொள்ளுங்கள்.
ஆக மீதமிருப்பது கொழுப்பு மட்டுமே....எழுபது கிலோ ஒல்லியான நபர் உடலில் சுமார் 15 கிலோ கொழுப்பு இருக்கும். இது முழுக்க, முழுக்க அன்றாட தேவைகளுக்கு வேண்டும் என்ற நோக்கில் உடலால் கரண்ட் அக்கவுண்டில் போடபப்ட்ட பணமே. இதில் சுமார் 150,000 கலோரிகள் உள்ளன. நமக்கு ஒரு நாளைக்கு தேவை 2000 கலோரி மட்டுமே. கணக்கு போட்டுபாருங்க, அப்ப எத்தனை மாதத்துக்கு தேவையான கலோரியை நாம் வைத்துள்ளோம் என்று

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவர் ஒல்லியான 70 கிலோ நபர் என்பதே. இதே குண்டான நபர் என்றால் அவர் உடலில் பல லட்சம் கொழுப்பு கலோரிகள் கரண்ட் அக்கவுண்டில் எடுக்க தயாராக காத்திருக்கும்.

ஆனால் இன்சுலின் எனும் வாட்ச்மேன் அதை எடுக்க விடாமல் தடுத்துவிடுகிறார்.
சர்க்கரை அதிகமுள்ள தானிய உணவுகளை உண்டால் உடல் கொழுப்பு ஸ்டோரேஜ் மோடுக்கு சென்றுவிடும். அதன்பின் செல்கள் தாம் தேக்கி வைத்திருக்கும் கொழுப்பை எரிக்காது. கிளஒகோஜெனையும் தொடாது. புரதத்தையும் எரிக்க முடியாது. வேறு வழி என்ன? பசி, அகோரபசி தான். பசியைத்தூண்டி நம்மை மேலும் உணவை சாப்பிட்டு எனெர்ஜியை அடைய தூண்டி பட்டினியில் இருந்து உடல் தப்புகிறது. ஆனால் அப்படி சபபிடும் உணவும் சர்க்கரை நிரம்பிய உணவாக இருந்தால் இந்த ப்ராசஸ் மீன்டும் ரிபீட் ஆகிறது
ஆக வங்கியில் பல லட்சம் காலரிகள் நமக்காக காத்திருந்தும் அதை எடுக்க முடியாமல் வாட்ச்மேன்
தடுத்துவிடுகிறார்.

இன்சுலினை வெளியே வராமல் தடுத்தால் வங்கிக்குள் எளிதில் செல்லலாம். கேஷியர் நாம் விரும்பும் அளவு பணத்தை கொடுத்துக்கொண்டே இருப்பார். நாம் அடுத்த சில மாதங்கள் லீவு போட்டுவிட்டு, வேலைக்கே போகாமல் ஜாலியாக வங்கியில் இருக்கும் பணத்தை செலவு செய்யலாம்.

நார்வேயில் 175 கிலோ எடை இருந்த நோயாளி ஒருவர் ஒரு வருடம் வரை எதுவுமே உண்ணாமல் இருந்து உடல் இளைத்தார். அவரது இன்சுலினின் ஆட்டம் அடங்கி உடல் கெடொசிஸுக்கு சென்றவுடன் உடல் தான் தேக்கி வைத்த கொழுப்பை ஜாலியாக எரித்துக்கொண்டே இருந்தது. ஒரு வருடம் எரித்து முடித்தபின்னரே அவர் மீண்டும் உணவை உண்டார்.

ஆக இன்சுலினின் ஆட்டத்தால் நாமெல்லாம் மாடிவீட்டு ஏழையாக இருக்கிறோம்.

By- Neander Selvan.

No comments: