Monday, November 7, 2016

டாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறார்கள்?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore 
மேற்கு நாடுகளில் தான் அலோபதி தோன்றியது. அதை தான் இன்று மாடர்ன் மெடிசின் என உலகமே கொண்டாடுகிறது. விஞ்சானம் மூலம் பலப் புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தி பலரைக் காப்பாற்றும் அளவு சக்தி படைத்தது எங்கள் துறை. 

ஆனால் நாங்களும் சில பைத்தியக்காரத்தனமான, சுத்தமாக வியாதியை குணப்படுத்தாத சில வைத்தியமுறைகள் செய்திருக்கிறோம். உதாரணம், கத்தியை வைத்து நரம்பைக் கிழித்து ரத்தத்தை வெளியேற்றுவது. இன்னொரு வகை, அட்டைப் பூச்சிகளை பேஷன்ட் மேல் போட்டு ரத்தத்தை உறிஞ்ச வைப்பது. இதை அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு தொண்டை வலிக்காக செய்யப் போய், கிட்டத்தட்ட அவர் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டார்.

இந்த ரத்தம் வடித்தல், அட்டைப் பூச்சி ட்ரீட்மென்ட் எல்லாம் தவறு, பிரயோஜனப்படாது, ஆபத்து என நானூறு வருடங்களுக்கு முன்பே சில மருத்துவர்கள் சொன்னாலும், அறிவியல் ஆதாரமில்லை என மற்ற மருத்துவர்கள் ஒதுக்கினார்கள். அப்புறம் ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தான் இந்த முறைகள் தவறு என அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

அந்த அட்டைப்பூச்சி மருத்துவம் போல் இன்னொன்று தான், கொலஸ்டிராலை குறைப்பதற்கு ஸ்டாடின் (Atorvastatin, Rosuvastatin) மருந்துகளைக் கொடுப்பது. 

No comments: