Sunday, November 6, 2016

முழுதானியம் சர்க்கரை வியாதிக்கு நல்லதா?



Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.
பல ஆராய்ச்சிகள், முழுதானியம் சுகர் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் (சுகர் வருவதன் முந்தைய நிலை) வராமல் தடுக்க வல்லது என கூறுகின்றன,
இந்த ஆராய்ச்சிகளை உற்று நோக்கினால், அவர்கள் முழுதானியத்தையும் உடைக்கப்பட்ட தானியம், மாவுகள் (flour) ம் கம்பேர் செய்திருப்பதை அறியலாம். அதாவது பாலிஷ் செய்யப்பட்ட தானியத்தை விட முழுதானியம் நல்லது என்று. அதாவது உடைக்கப்பட்ட தானியம் உள்ள உணவுகள் உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றி விடும். முழுதானியம் கொஞ்ச நேரம் கழித்து சுகரை ஏற்றும். அவ்வளவு தான்.
இரண்டிலும் சர்க்கரைவியாதி வர அதிக வாய்ப்புள்ளது. இதை அவர்கள் "முழுதானியம் சாப்பிட்டால் சுகர் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் வராமல் தடுக்கும்" என்கிறார்கள்.
இவர்கள் சொல்லும் லாஜிக் படி ஒருவன் முதல் மாடியில் இருந்து விழுந்தால் (முழுதானியம்) கைகால் மட்டுமே உடையும். இரண்டாம் மாடியில் (உடைக்கப்பட்ட தானியம்) இருந்து விழுந்தால் உயிர் போகும். அதனால் முதல் மாடியில் இருந்து விழுந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என சொல்ல வருவது போல் உள்ளது.
தானியத்தில் உள்ள கார்ப் எனும் மாவுச்சத்து ஒரு நாளைக்கு 60கிராமிற்கு மேல் இருந்தால், அது எந்த தானியமாக இருந்தாலும் நமக்கு சுகர் வர வாய்ப்புள்ளது என அறிக.

No comments: