Sunday, November 6, 2016

குழந்தைகளுக்கு வரும் காக்கைவலிப்பு: தீர்வு என்ன?



காக்கைவலிப்பு என பொதுவாக அழைக்கபட்டாலும் இதில் பல வகைகள் உண்டு. வலிப்பு ஏன் வருகிறது என நமக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தெரியாது. ஆனால் இதற்கான தீர்வு பண்டைய கிரேக்கர், ரோமானியர் காலத்திலேயே ஓரளவுக்கு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் 1920ல் தான் இதற்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது. தீர்வு கண்டுபிடிக்கபட்டிருந்தாலும், மருத்துவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதன்பின் ஏனோ அது மக்களை சென்று சேரவே இல்லை. இப்புதிரான வரலாற்றை சற்று ஆராய்வோம்.
காக்கை வலிப்பு உள்ளவர்கள் விரதம் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வலிப்பு வருவதில்லை என்பதை பண்டைய கிரேக்கர்கள் கண்டுபிடித்தார்கள்...எத்தனை நாள் சாப்பிடாமல் இருக்கிறார்களோ, அத்தனை நாளும் அவர்களுக்கு வலிப்பு வருவதில்லை. சாப்பிட ஆரம்பித்ததும் வலிப்பு மீண்டும் வர துவங்கியது. அதனால் உணவில் உள்ள ஏதோ ஒன்றுதான் இதை உருவாக்கவேண்டும் என்பதை அன்றைய மக்கள் அறிந்திருந்தார்கள்.
நிற்க:::அக்காலத்தில் பெப்ஸி,கோக், மெக்டானல்ட்ஸ், எதுவுமே இல்லை....முழுக்க கைகுத்தல் அரிசி, கோதுமை, ஆர்கானிக் காய்களையே அன்று உண்டார்கள்...ஆனால் இதை எல்லாம் உண்ண ஆரம்பித்ததும் மீண்டும் வலிப்பு வந்தது. நிறுத்தினால் வரவில்லை


பைபிளில் வலிப்பு உள்ள ஒருவனை ஏசுவின் முன்னால் கொண்டுவருகிறார்கள்..ஏசு அவனுக்கு பரிந்துரைப்பது உபவாசத்தை!!!!!
இந்த புதிர் விடுபட்டது 1920களில்...அன்று தான் தற்செயலாக காக்கை வலிப்பு உள்ளவர்களுக்கு "லாங் செயின் டிரைகிளிசரைடு டயட்டில்" (long chain triglyceride diet) போட்டால் அவர்களுக்கு வலிப்பு பெருமளவில் நின்றுவிடுவதாக கண்டறிந்தார்கள்..10- 15% பேருக்கு இதனால் முழுமையாக வலிப்பு நின்றே விட்டது. மீதி பேருக்கு 50 முதல் 75% வரை வலிப்பு வரும் விகிதம் குறைந்தது
லாங் செயின் டிரைகிளிசரைடு டயட் என்றால் என்ன?
லாங் செயின் டிரைகிளிசரைடு என்பது ஒரு வகை ஸ்பெஷல் உறைகொழுப்பு...இது உள்ள உணவுகள் ஆடு, மாடு, பன்றி போன்ற சிகப்பிறைச்சிகள்...தேங்காயில் உள்ளது மீடியம் செயின் டிரைகிளிசரைடு. பட்டரில் உள்ளது ஷார்ட் செயின் டிரைகிளிசரைஅடு
ஆக வெறும் இறைச்சியை மட்டும் உண்டு வருகையில் காக்கை வலிப்பு நின்றது கண்டறியபட்டது...இதனால் உலகபுகழ் பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் காக்கை வலிப்பு வார்டில் ஸ்Pஎஷலாக கெடொஜெனிக் டயட் வார்டு ஒன்றை துவக்கினார்கள். எந்த மருந்தாலும் நிற்காத வலிப்பு நோய் உள்ள குழந்தைகளை இந்த வார்டில் போடுவார்கள். மிக, மிக ஸ்ட்ரிக்டாக குழந்தைக்கு இறைச்சி மட்டுமே வழங்கபடும்..இறைச்சியை உண்ன பற்கள் இல்லாத குழந்தைகளுக்கு பார்முலா வடிவில் இறைச்சி வழங்கபட்டது. பச்சை குழந்தைகளும் கெடொசிஸ்ல் போனபின் அவர்களுக்கு வலிப்பு நின்றது
இன்றுவரை கெடொசிசுக்கு ஒப்பான காக்கைவலிப்பு மருந்து எதுவும் கிடையாது. எந்த மருந்தாலும் நிற்காத வலிப்பு இதனால் நிற்கும் என மருத்துவர்களுக்கு தெரியும். ஆனால் டயட்டின் கடுமை, குழந்தைகள் அதை பின்பற்ற கடினமாக இருப்பது போன்ற காரணத்தால் இந்த தீர்வை மெதுவாக விட்டுவிட்டு வேறு மருந்துகள், மாத்திரைகளுக்கு மாறிவிட்டார்கள். மக்களும் மருந்து சபபிடுகிறோமே என சொல்லி குழந்தைகளுக்கு வேறு எந்த கட்டுபாடும் விதிக்கவில்லை...ஆக வலிப்புக்கு நிவாரணமே இல்லாமல் இருக்கிறது
2012ல் தான் வலிப்புக்கான காரணத்தை விளக்கும் முக்கிய ஆய்வறிக்கை ஒன்று ஹார்வர்டு மெடிக்கல் பல்கலைகழகத்தில் பதிப்பிக்கபட்டது. இதன்படி வலிப்பு வருவதற்கான காரணமும், கெடொஜெனிக் டயட் அதை எப்படி தீர்க்கிறது என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது
காக்கை வலிப்பு என்பது ஒரு மூளை நரம்பியல் பிரச்சனை.நம் மூளை நரம்பில் பிசிஎல் 2 என்ற வகை புரதம் ஒன்று உண்டு. இதுதான் மூளைக்கு செல்லும் க்ளுகோஸ் அளவுகளை கட்டுக்குள் வைக்கும் புரதம். இது பாதிப்படைகையில் அல்லது சரியாக வேலை செய்யாமல் போகையில் மூளை நியூரான்களில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தது போன்ற அதிர்ச்சி உருவாகிறது. மயக்கம், மூளை உறுப்புகள் மேல் கட்டுபாட்டை இழத்தல் எல்லாமே உருவாகி வலிப்பு ஏற்படுகிறது
க்ளுகோஸை கட்டுபடுத்தும் இந்த நியூரானுக்கு அந்த வேலையை கொடுக்காமல் விட்டால், அதாவது உடலின் எரிபொருளை சுகரிலிருந்து கொழுப்பாக மாற்றினால் மூளை க்ளுகோஸுக்கு பதில் கிடோனில் இயங்க துவங்கும். கிடோனில் மூளை இயங்குகையில் இந்த நியுரான் மிக அழகாக வேலை செய்கிறது. வலிப்புகள் பெருமளவு நின்றுவிடுகின்றன , பலருக்கு சுத்தமாக வருவதே இல்லை
குழந்தைகளுக்கு 90:10 என்ற விகிதத்தில் காலரிகளில் கொழுப்பும், புரதமும் இருக்கவேண்டும் என்ற விகிதத்தில் லாங் செயின் டிரைகிளிசரைடு ஆசிட் கெடொஜெனிக் டயட் வழங்கபடுகிறது. இந்த 90:10 விகிதம் பொதுவான 75:25 விகிதத்தை விட மிக கடுமையானது..75:25ல் மீன், கோழி எல்லாம் கூட சற்று சேர்க்கலாம். 90:10ல் முழுக்க போர்க் மற்றும் பீஃப் தான்.
கவனிக்க:::இது குழந்தைகளுக்கு.
இத்தனை கடுமையான டயட்டை நாம் பின்பற்ற முடியுமா?
முடியாது..அதனால் தான் மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டு அமைத்து குழந்தைகளை அட்மிட் செய்து பின்பற்ற வைக்கிறார்கள்.
ஆக வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு முதற்கண் குப்பை உணவுக்ள், கோதுமை, நிலக்கடலை, ஐஸ்க்ரீம் முதலியவற்றை நிறுத்தவேண்டும். அதன்பின் மெதுவாக தானியங்கள், ஐஸ்க்ரீம், கேக் எல்லாவற்றையும் நிறுத்தவெண்டும் அல்லது குறைக்கவேண்டும். மெதுவாக காலை உணவாக முட்டை, மதியமும் மாலையும் அதிக கொழுப்புள்ல சிகப்பு இறைச்சியும் பிராக்களி, முட்டைகோஸ் முதலிய வெகுசில காய்கறிகளுமே வழக்ஙபடவேண்டும். குழந்தைகளை டயட்டில் கட்டுபடுத்துவது மிக கடினம்..ஆனால் முடிந்தவரை அவர்களுக்கு சுகர், கார்ப் இல்லாத உணவை கொடுத்து வந்தால் வலிப்பின் தீவிரம் குறையும். அவர்கள் சற்று வளர்ந்தபின் முழுமையாக கெடொசிஸில் இறக்கினால் 2 வருடங்களில் வலிப்பு குணமாகிவிடும். ஏன் எனில் வலிப்பு இருப்பவர்களுக்கு 2 வருட காலகட்டமே கெடொசிஸ் பரிந்துரைக்கபடுகிறது. அதன்பின் சற்று கார்ப் சேர்த்துகொள்லலாம். ஆனால் தானியம் பக்கம் போககூடாது.
துவக்கநிலை சாம்பிள் காக்கை வலிப்பு டயட்:
காலை: 3 முட்டை ஆம்லட்..நெய்யில்
மதியம்: சிக்கன் லெக் பீஸ்...100 கிராம் பிராக்களி, லெட்டுஸுடன் அல்லது சிக்கன் சாலட்.
மாலை: 1 துண்டு சீஸ். 30 கிராம்
மாலை: சிகப்பிறைச்சி (ஆடு, பீஃப், போர்க்).
உடனே இதை துவக்கவேண்டும் என இல்லை...
முதல்படியில் குப்பை உணவுகளை நிறுத்தவேண்டும்...
மெதுவாக காலை உணவாக முட்டையை அறிமுகபடுத்தவேண்டும். சீரியல், ஓட்மீல்,மாகி நூடில்ஸ் குப்பைகளை தொலைத்து தலைமுழுகவேண்டும்
மதியம் சிக்கன் வைத்து கொடுக்கவேண்டும்...அரிசி கொஞ்சமாக கொடுக்கலாம்...கோதுமை வேண்டாம். சோயா, மக்கா சோளம் பக்கம் போகவேண்டாம்.
இரவு மீன் கொடுத்து கொஞ்சமாக சோறு கொடுக்கலாம். இப்படி படிப்படியாக இந்த டயட்டுக்கு கொண்டுவரவேண்டும். துவக்கத்தில் காய்கறிகளை கொடுத்து குப்பை உணவுகளை மறகடியுங்கள். முக்கியமாக பெரியவர்கள் குப்பை உணவுகளை சபபிடுவதை நிறுத்துங்கள். கோதுமை, சோயா வேண்டவே வேண்டாம். சமையல் எண்ணெயாக நெய் மட்டும் பயன்படுத்தவும்.

Neander Selvan

No comments: