Sunday, November 6, 2016

பேலியோவில் எப்படி சர்க்கரை வியாதி சரியாகிறது?





Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore.
கார்ப் எனப்படும் மாவுச்சத்து அதிகம் சாப்பிட்டால், இன்சுலின் அதிகம் சுரக்கும். அதிக இன்சுலின் சுரக்கும் போது, செல்கள் இன்சுலின் சொல்வதை கேட்காது. இதுவே இன்சுலின் எதிர்ப்பு நிலை. இன்சுலினின் முக்கிய வேலை, ரத்தத்தில் உள்ள க்ளுக்கோசை செல்களுக்கு உள்ளே அனுப்பவது. 

செல்கள் இன்சுலின் சொல்வதைக் கேட்காவிட்டால், ரத்த சர்க்கரை ஏறும். டயாபெடிஸ் வரும். இதிலிருந்து மீள்வது எப்படி?

கல்யாணமான புதிதில் கணவன் என்ன சொன்னாலும் மனைவி கேட்பாள். கொஞ்ச நாட்களுக்கு பிறகு கணவன் (இன்சுலின்) ஓவராக மனைவியை திட்டுவான். அப்போது கணவன் சொல்வதை மனைவி (செல்கள்)கேட்கமாட்டாள். குடும்பத்தில் பிரச்சினை (டயாபெடிஸ்) வரும்.

அதே கணவன் இரண்டு மாதங்களுக்கு ஃபாரின் போய்விட்டால், கணவன் மனைவி, இருவருமே ஏங்க ஆரம்பிப்பார்கள். கணவன் வந்த பின்பு கத்த மாட்டான், மனைவியும் அவன் சொல்வதைக் கேட்பாள்.

பேலியோ உணவுகள் இன்சுலின் உற்பத்தியை தூண்டாது. அதிக ரத்த இன்சுலின் அளவுகள் கட்டுக்குள் வரும். அப்போது செல்கள் இன்சுலின் சொல்வதைக் கேட்க ஆரம்பிக்கும். க்ளுக்கோஸ் செல்களுக்குள் நுழையும். ரத்த சர்க்கரை அளவுகள் நார்மலாகி, மருந்தே இல்லாமல் சர்க்கரை வியாதி கொஞ்சம் கொஞ்சமாக மறையும். 

No comments: