Showing posts with label எடைபயிற்சியும் பேலியோவும். Show all posts
Showing posts with label எடைபயிற்சியும் பேலியோவும். Show all posts

Monday, November 7, 2016

பேலியோவும் எடை பயிற்சியும்!!! ….. பாகம்----- 9




.
.
ஒருவழியா நடையா நடந்துட்டோம்! நடை பயிற்சிங்கறது எல்லோருக்கும் சுலபம்! நினச்சா உடனே ஒரு ஷீ வ மாட்டிகிட்டு கிளம்பிடலாம்ன்னு நெனச்ச உங்க எல்லோருக்கும் கடந்த எட்டு பாகங்களில் வெளிவந்த நடை பயிற்சி கட்டுரை கொஞ்சம் கலங்க வைத்திருக்கும்! நிறைய பேர் என் மெஜஞ்சர் பாக்ஸில் நடக்கறதுல இத்தனை விஷயம் இருக்கா சார்-ன்னு கேட்டாங்க! உண்மைய சொன்னா நான் சொன்னது பாதிதான்! இன்னும் எவ்வளவோ இருக்கு! இருந்தாலும் நமக்கு இது போதும்!
.
.
அடுத்து உடற்பயிற்சி பற்றி பார்க்கலாம்!
.
.
உடற்பயிற்சியில் நிறைய வகைகள் இருக்கு!
.
1. எந்த கருவிகளும் இல்லாமல் செய்யும் ஃப்ரீ ஹேண்டட் பயிற்சிகள்!
2. நீச்சல், சைக்ளிங், ஓடுதல், நடத்தல், மற்றும் தடகல பயிற்சிகள்!
3. சில வகையான எடைகளை வைத்து வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது! தம்பல்கள், பார்பெல் ராடு போன்றவையும் சில எடை ப்ளேட்டுகளும் வைத்து செய்வது!
4. கராத்தே, குங்ஃபூ, சிலம்பம், பாக்ஸிங் போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கான சிறப்பு உடற்பயிற்சிகள்!
5. ஆனழகன் போட்டிகள், எடை தூக்கும் போட்டிகளுக்கான சிறப்பு உடற்பயிற்சிகள்!
6. பொதுவான ஆரோக்கியத்துக்காகவும் கட்டான உடலை பேனுவதற்க்காகவும், செய்யப்படும் உடற் பயிற்சிகள்!
7. குறிப்பிட்ட உடற்கோளாறுகளை சரி செய்யும் முட நீக்கியல் உடற்பயிற்சிகள்! (பிஸியோ தெரபி)
இது போன்ற இன்னும் நிறைய உடற்பயிற்சி வகைகள் உள்ளது!
.
.
இது எல்லாவற்றையும் நாம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை! பொதுவாக உடல் நலம் பேனும் உடற்பயிற்சிகள், இளைஞர்கள் கட்டுடலை பெறுவதர்க்கான உடற்பயிற்சிகள், அதிக உடல் எடை இருப்பவர்கள் எடை குறைய உடற்பயிற்சிகள், எடை குறைவாக உள்ளவர்கள் எடை அதிகரிக்க பாடி மாஸ் கிரியேட்டிங் பயிற்சிகள், சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் உடற்பயிற்சிகள் , ஆகியவற்றை ஓரளவு பார்க்கலாம்!
.
.
அதாவது எனக்கு தெரிந்தவரை எழுதுகிறேன்! நான் எழுதுவது எனது அனுபவம் மட்டுமே! சில நாட்களுக்கு முன் ஒரு முக நூல் நண்பர் இன்பாக்ஸில் கேட்டார்! சார்? நீ நீங்க பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கீங்களா? இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்? ஆகவே இந்த சந்தேகம் இதை தொடர்ந்து படிப்பவர்களுக்கு வந்துவிட கூடாது என்பதற்க்காக மிக சுருக்கமாக எனது உடற்பயிற்சி மீதான அனுபவத்தை சொல்லி விடுகிறேன்!
.
.
உடற்பயிற்சி நான் செய்ய ஆரம்பித்தது 1983-ம் ஆண்டு! அதாவது எனக்கு 10 வயது! எங்கள் வீட்டில் நடந்த ஒரு விரும்பதகாத சம்பவத்தின் அடிப்படையில் ஒரு விபத்தாக உடற்பயிற்சி கூடம் ஒன்று ஆரம்பித்தோம்! அதில் எங்கள் அண்ணன்கள் இரண்டு பேர் மற்றும் எங்கள் உறவினர்கள் வீட்டு பையன்கள் சுமார் 15 பேர் சிலம்பம் கற்றுகொண்டார்கள்! அப்போது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட அடிப்படை பயிற்சிகளான தண்டால், பஸ்கி, கர்லாகட்டை சுற்றுதல் ஆகியவற்றை பார்த்து அதனால் உந்தப்பட்ட நான் அவர்களோடு சேர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பித்ததுதான் எனது முதல் அனுபவம்!
.
.
அன்றில் இருந்து இன்று வரைக்கும் உடற்பயிர்ச்சி என் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது! அன்றில் இருந்தே எங்கள் வீட்டு கோழிகள் போடும் முட்டைகள் தினமும் கானாமல் போக துவங்கியது! அடிக்கடி கைகளை மடக்கி சத்து கட்டி ( பைசப்ஸ்) பார்க்கும் பழக்கம் வந்துவிட்டது! அதன் பாதிப்புதான் 10 வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு உங்களுக்கு உடற்பயிற்சி கட்டுரை எழுதிகொண்டிருக்கிறேன்!
.
.
ஆக 32 வருடமாக இந்த உடற்பயிற்சியை நான் விடவேயில்லை! 1988-ம் வருடம் எனது பள்ளிக்கு அருகே உள்ள மார்டன் ஜிம்மனாசியம் தான் எனக்கு முதன் முதலில் எடை பிளேட்டுகளை அறிமுகப்படுத்தியது! எனது இரண்டாவது குரு நாதர் மதிப்பிற்குறிய பாடிபில்டர் திரு ரத்தினம் அவர்கள்! எங்கள் நட்பு இன்று வரை தொடர்கிறது! சரி இந்த விபரம் போதும்… மேட்டருக்கு போகலாம்!
.
.
சாதாரணமாக ஒருவர் உடல் குண்டாக காட்சியளித்தால் அவரிடம் நாம் சொல்லும் அட்வைஸ், என்னங்க ஜிம்முக்கு போலாமில்ல! ஆக உடல் இளைக்க ஜிம்முக்கு போவது ஒரு வகை! சில ஒல்லி பிச்சான்களாக இருப்பார்கள்! அவர்களிடமும் நாம் தவறாமல் சொல்லும் வார்த்தை என்ன? என்னப்பா? ஜிம்முக்கு போய் உடம்பை தேத்த வேண்டியதுதானே? என்ற அறிவுரையை இலவசமாக அள்ளி வீசுவோம்! அதெப்படி உடல் இளைப்பதற்க்கும் உடல் ஏற்றுவதற்க்கும் இரண்டுக்குமே ஜிம்முக்கு போவது? இந்த குழப்பம் எல்லோருக்கும் இருக்கும்!
.
.
பொதுவாக உடல் இளைக்கவேண்டியவர்களை பார்த்து கறி மீன் முட்டையெல்லாம் அதிகம் சாப்பிடாதீங்க-ன்னு சொல்லித்தானே பார்த்திருக்கோம்! இப்ப அதான் பிரச்சனை! குண்டாக இருப்பவனிடம் போய் ஏப்பா! நல்லா கறி , மீன் ,முட்டை ,பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிடு! உடல் இளைக்கும் என சொன்னால் அவனுக்கு முதல் எதிரியே நாமதான் என்பதை போல பார்ப்பான்! அதானே உண்மை! ஆனால் இப்படி எதெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை போடும் என சமூகத்தால் நம்பப்பட்டதோ, அதெல்லாம் சாப்பிட்டு உடல் எடை குறைப்பதுதான் பேலியோ டயட்டின் சிறப்பு!
.
.
இதோடு சரியான உடற்பயிற்ச்சியும் செய்யும் பட்சத்தில் கட்டுடல் கனவை நனவாக்கி விடலாம்!

--Gunaseelan
.
( பின் குறிப்பு! புகைபடங்கள் எனது அக்கால உடற்பயிற்சி அனுபவங்களை சொல்வதற்காகவே வெளியிடப்படுகிறது! யாரும் திருஷ்டி வைக்காமல் பார்க்கவும்)

பேலியோவும் எடைபயிற்சியும்! ( நடை பயிற்சி)---- பாகம்------- 8

நடை பயிற்சியினால் ஏற்ப்படும் நன்மைகள் என்ன?

.
உடல் உழைப்பு, விளையாட்டு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட முடியாதவர்களுக்கு அற்புதமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு விஷயம் நடை பயிற்சி. நமக்கு, கராத்தே, யோகா, உடற் பயிற்சிகள், ஓட்டம், பல்வேறு விளையாட்டுக்கள் போன்றவைகளை விட நடை பயிற்சி மிகவும் எளிது. செலவில்லாத விஷயம்!
.
.
நல்ல ரம்மியமான இயற்கை சூழ்ந்த இடங்களில் நடை பயிற்சி செய்வது மன இறுக்கம், மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதிற்கு மகிழ்ச்சி தரும்! நல்ல நடைபயிற்சி நலம் தரும் ஹார்மோன்களை உடலில் சுரக்கச் செய்யும். உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மேம்படும். நன்றாகப் பசி எடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்! தோலின் இளமையை பாதுகாக்கும்!
.
.
குறிப்பாக, பெண்கள் மற்றும் நோய் தாக்குதலில் மீண்டு வருபவர்களுக்கு மிகவும் எளிமையானது. சுருக்கமாக சொன்னால் தொடர்சியான நடை பயிற்சி உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது. கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது! நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறது! செலவில்லாமல் தேவையான வைட்டமின் டி-யும் கிடைக்கிறது!
.
.
உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எரித்து ஆரோக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் வைத்துகொள்கிறது! மெயிண்டன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் பெரிதாக கணக்கு பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் நான் சொல்லிவிட்டேன் என்பதற்க்காக பிரியானி, பாயசம் என ஆரம்பிச்சுட கூடாது! சீட்டிங் கூடாது! எப்பவாச்சும் ஆசைப்பட்டா ரெண்டுதுண்டு மல்கோவா , இமாம்பசந்த் போன்ற சுவைக்காக சாப்பிடும் மாம்பழங்களை கடித்துகொள்ளலாம்!
.
.
ஆனால் அதோடு விட்டுவிட வேண்டும்! ஒரு நேர உணவாக கணக்கில் எடுத்து அதை சாப்பிட வேண்டும்! இதில் சில நண்மைகளும் இருக்கு! கணையத்தை ஒரேயடியாக ஓய்வில் வைத்திருக்கும் நமக்கு இப்படியான சில நாட்களில் அதற்க்கு அதிர்ச்சி வைத்தியம் குடுப்பதை போல இருக்கும்! நான் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறேன் பேர்வழின்னு வாரத்தில் மூனு நாட்கள் மாம்பழம் தின்றால் அதற்க்கு நான் பொருப்பல்ல!
.
.
அதுவும் கார்பைட் கல் போடாத மாம்பழம்! அடுத்து நாம் சாப்பிடகூடிய ஒரே பழம் பப்பாளி! இதை இரண்டையும் மட்டும் மாதத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் ஒரு நேர உணவாக எடுத்து கொள்ளலாம்! நன்றாக கவனிக்கவும்…. மெயிண்டன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் மட்டும்!!! மெயிண்டென்ஸ் டயட்டில் இருப்பவர்கள் இப்படி எப்போதாவது ஃப்ரூட் சீட்டிங் செய்வது தவறில்லை! ஏனென்றால் தொடர்ச்சியான நடை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எரித்துகொண்டே இருப்பதால் புதிதாக கொழுப்பு சேர வாய்ப்பே இல்லாமல் போகிறது!
.
.
மேலும் நாள் தவறாத நடைபயிற்சியானது அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது. அடி வயிற்றில் மேலும் கொழுப்பு சேராமல் பார்த்துகொள்கிறது! மூட்டுகளை இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துகொள்கிறது! நடக்க நடக்க மூட்டு இனைப்புகளில் குளுகோஸமின் என்ற உயவு ஹார்மோன் சுரந்துகொண்டே இருக்கும்! தொட்டனை தூரும் மணர்க்கேணி என்பதை போல உபயோகிக்க உபயோகிக்கத்தான் எந்த உருப்புகளும் அதன் முழு செயல் திறனுக்கு வரும்! நடை அதுக்கு மிக முக்கியமானது!
.
.
மேலும் எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது. முக்கியமாக நல்ல தூக்கம் வர உதவுகிறது. ஹாஸ்பிட்டல் மற்றும் ஆம்புலன்ஸ் கனவுகள் வருவதில்லை! ஆனால் அதிர்ஷ்ட வசமாக சிலருக்கு அழகிகளை சுமந்துகொண்டு டூயட் பாடும் கனவுகள் கூட வந்து ஆனந்தப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது!

.
.
மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது. தினமும் குறைந்தது 45 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும். ஆரோக்கியம் நம்முடன் எப்போதும் இருக்கும். காமன் மேன் டயட்டில் ஒரு நபர் நடக்க ஆரம்பித்து குறைந்தது இருபது நிமிடங்கள் கழித்துதான் உடலில் இருக்கும் கொழுப்பு கொஞ்சம் எரிய ஆரம்பிக்கும்! ஆனால் அற்புதம் செய்யும் பேலியோவாலாக்களுக்கு இரண்டு நிமிடத்தில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிய தொடங்கும்!
.
.
ஆகவே அன்பர்களே நல்ல நாள் பஞ்சாங்கம் எல்லாம் பார்க்காமல் உடனே தொடங்கலாம் நடைபயிற்சியை! ஏற்கனவே, தொடங்கி பயிற்சி மேற்கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு இன்னும் சில நிமிடங்கள் நடையை அதிகப்படுத்தலாம். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு கிடைத்துள்ள அற்புத வரம்தான் நடைபயிற்சி ! பயன்பெறுங்கள்!!! ஆரோக்யத்துடன் வாழுங்கள்!
.
.
மீண்டும் சொல்கிறேன்! ஆரோக்கியம் எல்லா செல்வங்களையும் விட மேலானது! ஹெல்த் ஈஸ் மோர் ப்ரீஷியஸ் தென் வெல்த் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்! நான் சொன்ன இதெயெல்லாம் கடந்தும் இன்னும் என்னற்ற நற்பயன்கள் உள்ள நடைபயிற்ச்சியை உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் மகிழ்ச்சி என்ற இனையற்ற செல்வம் உங்களுடன் எப்போதும் இருக்கும்!
.
.
நடைபயிற்சி அனுபவ கட்டுரைமுடிந்தது! அடுத்து ஒரு சிறிய இடைவெளி விட்டு எடை பயிற்சி (உடற்பயிற்சி) கட்டுரை வரும்! ………………… நன்றி!!!

Gunaseelan

பேலியோவும் எடைபயிற்சியும்!!! ----------- பாகம் – 7 ( நடை இயந்திரம் )


ட்ரெட்மில் எனப்படும் நடை இயந்திரத்தில் நடக்கலாமா? 


.
.
தாராளமாக நடக்கலாம்! ஆனால் நடை இயந்திரம் (ட்ரெட்மில்) தரமானதாக இருக்க வேண்டும்! நல்ல காற்றோட்டமான அறையில் வைத்து நடக்க வேண்டும்! தகுந்த க்ரிப்பான ஷீ அனிய வேண்டும்! எக்காரணம் கொண்டும் நடை இயந்திரத்தில் வெரும் காலில் நடக்க கூடாது! நாம் நடக்கும் இயந்திரத்தின் ரப்பர் கன்வேயரானது கீழே உராயாமல், அடிக்கடி சிலிக்கான் லூஃப்ரிகெண்டுகளை பயன்படுத்தி உராய்வை குறைக்க வேண்டும்!
.
.
இல்லையென்றால் அந்த கன்வேயர் பெல்ட் ஆனது கீழே உள்ள பிளாஸ்டிக் உருளைகளுடன் உராய்ந்து பென்சீன் போன்ற விஷ வாயுக்களை வெளியிடும் ஆபத்து இருக்கிறது! மேலும் திடீரென பவர் கட் ஆனால் இயந்திரத்தின் பெல்ட் சரியாக லூஃப்ரிகண்ட் செய்யப்படாமல் ஹைஃப்ரிக்ஸன் ஆக இருந்தால் பிரேக் பிடிச்ச மாதிரி கன்வேயர் பெல்ட் நின்று விடும்! அப்படி உடனடியாக பெல்ட் நிற்க்கும் போது நாம் குப்புற விழ வாய்ப்பு அதிகம்!
.
.
ஒரு தபா நான் 12 கிலோ மீட்டர் வேகத்தில் ட்ரெட் மில்ல ஓடிகிட்டு இருக்கும் போது எங்க கீழ் வீட்டுல இருந்த அபிஷ்டு ஒருத்தன் மெயின் சுவிச்ச ஆஃப் பன்னிட்டன்! நான் நிற்க முடியாமல் ட்ரெட்மில் மேல ஏறி இரண்டு கரணம் அடிச்சு விழுந்தேன்! நல்ல வேளை! யாரும் பார்க்காததால மண் ஒட்டலை!
.
.
ஆகவே கவனமாக நடக்க வேண்டும்! இதை ஹில் மோடுக்கு மாற்றி ஓட்டுவதால் பயிற்சி கடுமையாக இருக்கும்! மலை ஏறுவதைபோன்றே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும்! ஆனால் மூட்டுவலி இருப்பவர்கள் இப்படி ஹில் மோடில் வைத்து நடப்பதோ, ஓடுவதோ ஆபத்து! நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஹில் மோடில் வைத்து நடப்பதால் தவறில்லை! கலோரி வேகமாக எரியும்! கொழுப்பு சரசரவென குறையும்!
.
.
அதிலும் லெவல் 1-லிருந்து மெஷின்களின் மாடல்களை பொருத்து 15 லெவல் வரைக்கும் இருக்கும்! நம்மால் எதுவரை முடிகிறதோ அதுவரைக்கும் உயர்த்தி வைத்து நடக்கலாம்! ஹில் மோடுக்கு மாற்றி நடக்கும் போது வேகத்தை குறைத்துகொள்வது நல்லது! வயதானவர்கள், அதிகம் எடை உள்ளவர்கள் அந்த ட்ரெட்மில்லின் முன்னால் உள்ள கேண்டில்பாரை பிடித்துகொண்டும் நடக்கலாம்!
.
.
அப்படி நடக்கும் போது கைகளுக்கு முன்னோக்கிய அழுத்தம் கொடுத்து வயிறை இருக்கமாக வைத்துகொண்டு நடக்கும் பட்சத்தில் வயிற்றுபகுதியில் உள்ள கொழுப்பு சீக்கிரம் கரையும்!!! ஆனால் செயற்க்கையாக வயிற்றை உள் நோக்கி இழுத்து பிடித்து கொண்டு நடப்பது ஆபத்து! கைகளை ஹேண்டில் பார்களில் அழுத்தும் போது ஏற்ப்படும் இயற்க்கையான அந்த லேசான இருக்கமே வயிற்றுதசைகளை வலுவாக்கி கொழுப்பை குறைக்கும்! கால்களுக்கு போக வேண்டிய அழுத்தத்தை கைகள் பகிர்ந்து கொள்வதால் கால் வலியும் குறைவாக இருக்கும்! நல்ல தரமான ப்ராண்டட் நடை இயந்திரத்தின் குறைத்தபட்ச விலையே ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் இருக்கும் !!!
.
.
அடுத்து நாம் நடக்கும் போது உடலில் பெருகும் வியர்வை இயந்திரத்தின் மின் பாகங்களில் படாமலும் கவனமாக நடக்க வேண்டும்! தொடர்ந்து அதில் நடப்பது சிலருக்கு ஒரு மாதிரி போரடிக்கும் ஆகையால் வாரத்தில் இரண்டு நாள் வெளியில் சென்றும் நடக்கலாம்! அல்லது அந்த ட்ரெட்மில்லின் நேராக ஒரு டி வி பெட்டியை வைத்து கொண்டு எஃப் டிவி சேனலில் வரும் பிகினிகளை பார்த்துகொண்டே நடந்தால் களைப்பு தெரியாது! ஆனால் அது மனைவிக்கு தெரியாமல் இருக்க வேண்டும்!!! தெரிஞ்சா அடுத்து வீட்டுல WWF- குத்துசண்டை ஆரம்பிச்சுடும்! அதுக்கு நான் பொருப்பல்ல!!!
.
.
இதேபோல நின்றுகொண்டே ஓட்டும் எலிப்டிகல் சைக்கிள் வாங்கியும் ஓட்டலாம்! ட்ரெட் மில் அளவுக்கு இது ஆபத்து இல்லைன்னாலும் அலைன்மெண்ட் சரியாக உள்ள ஒரே சீராக ஓடும் தரமான இயந்திரத்தை வாங்கித்தான் உபயோகிக்க வேண்டும்! டி வி விளம்பரத்தில் வரும் பாடாவதி மெசின்கள் மூட்டுகளுக்கு தீங்கு விளைவிக்கும்!
.
.
நல்ல தரமான எலிப்டிக்கல் இயந்திரத்தின் குறைந்த விலையே 90,000 இருக்கும்! கொழுப்பை எரிப்பதில் இந்த எலிப்டிக்கல் மெஷினும் கில்லிதான்! கைகளுக்கும் கால்களுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு வேகமாக எரியும்! லாட்ஸ் மற்றும் ஆர்ம்ஸ் தசைகளும் ஸ்ட்ரெச் ஆவதால் கிட்டத்தட்ட முழு உடலும் பயிற்சி பெறும்! ஆனால் குறைந்தது மணிக்கு 30 நிமிடம் ஓட்ட வேண்டும்! அதிக பட்சம் 60 நிமிடம் போதும்! இதிலும் ஹில் மோடு வைத்தும் ஓட்டலாம்! ட்ரெட்மில் போல இதில் மூட்டு வலி அதிகம் வருவதில்லை! எனவே ஓட்டமுடிந்த எல்லோருமே பயன்படுத்துவதால் தவறில்லை!!!
.
.
இன்னொரு முக்கியமான விஷயம் ரூமுக்குள் ட்ரெட்மில் வச்சு நடக்கும் போதும் ஓடும் போதும் நமக்கு தேவையான ஆக்ஸிசன் வெண்ட்டிலேசன் கிடைக்குமான்னு தெரியாது! அதாவது நம்மை சுற்றியுள்ள காற்றில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிக பட்சம் 500 PPM- க்கு மேல் போக கூடாது! அப்பொழுதுதான் ஆக்ஸிசன் அளவு நமக்கு போதுமானதாக இருக்கு என அர்த்தம்!
.
.
இந்த கார்பன் டை ஆக்ஸைடை அளக்க ஒரு கருவி உள்ளது! அப்படி CO2 அதிகமாக இருந்து ஆக்ஸிசன் பற்றாக்குறையாக இருந்தால் வசதி இருப்பவர்கள் ஒரு டொமஸ்டிக் ஆக்ஸிசன் ஜெனரேட்டரை வாங்கி வைத்து கொள்ளலாம்! அது காற்றில் இருந்து மற்ற அசுத்தங்களை பிரித்து சுத்தமான ஆக்ஸிசனை நமக்கு வழங்கும்! அதேபோல் காற்றில் உள்ள 20 மைக்ரான் அளவுக்கு கீழே உள்ள காற்றில் சுலபமாக பறக்ககூடிய நுண்னிய தூசிகளை வடிகட்ட மைக்ரோ ஏர் ஃபில்டர் என்ற இயந்திரம் கூட உள்ளது!
.
.
அதிக தூசிகள் காற்றில் இருக்க சாத்திய கூறு உள்ளவர்கள், பஞ்சாலைகள், சிமண்ட் ஆலைகள், நில்லகரி சுரங்கங்கள், மற்றும் பிரதானமான போக்குவரத்து மிகுந்த சாலைகளின் பக்கமாக வீடு உள்ளவர்கள் இந்த இயந்திரங்களை பயன்படுத்தலாம்! விலை கொஞ்சம் அதிகம்! இம்மூன்றும் சேர்ந்து ஒன்னறை லட்ச ரூபாயை தாண்டும்! நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 1,60,000 ரூபாய்க்கு வாங்கினேன்! கிராமத்தில் இருப்பவர்களுக்கு இந்த சிரமம் இல்லை! இயற்கை ஆக்ஸிசன் நிரம்ப கிடைப்பதால் கொடுத்துவைத்தவர்கள்!
.
.
அடுத்த பாகத்தில் நடை பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்!!! …………………. தொடரும்!!!

Gunaseelan

பேலியோவும் எடைபயிற்சியும் ---பாகம்--6


வெறும் காலில் நடக்கலாமா???


.
.
ஷீ இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? வெறும் காலில் நடப்பது மிக மிக மிக நல்லது! உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்த கூடிய நரம்பு முடிச்சுகள் பாதத்தில்தான் முடிவடைகிறது! அதை நடையின் போது மிக சுலபமாக தூண்டமுடியும்!
.
.
ஆனால் அதற்க்கு நாம் வாழும் சமூகம் தகுதியானதா என்றால் இல்லை என்ற வருத்தமான பதிலைத்தான் சொல்லவேண்டியுள்ளது! சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்துகொள்ளும் அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லை என்பது வருந்ததக்க விஷயமே!!!
.
.
சாலைகளில் நாம் நடக்கும் போது சர்வ சாதாரனமாக கானக்கிடைக்கும் ஆணிகள், துருப்பிடித்த ஸ்க்ரூக்கள், பழைய லாடங்கள், உலர்ந்த குருதியுடன் கூடிய சவர ப்ளேடுகள், உடைந்த கண்ணாடி சில்லுகள், துருப்பிடித்த கம்பிகள் , நோய்கிருமிகள் தாங்கிய மருத்துவ கழிவுகள் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட ஊசிகள் இதெல்லாம் மனிதனின் காலை பதம்பார்க்க மண்ணில் புதைந்திருக்கும் கொலைக்கருவிகள்!!!
.
.
உலர்ந்த குருதியில் ஒரு வாரம் உயிர்வாழும் நோய் கிருமிகள் உள்ளதாக எங்கோ சமீபத்தில் படித்தேன்! ஆக இத்தனை சோதனைகளை தாண்டி நம்மால் வெறும் காலில் நடக்க முடியுமா என்பதே கேள்வி! அதனால்தான் நல்ல தரமான ஷீ அனிந்து நடக்கவேண்டும் என அறிவுறுத்தினேன்!
.
.
மற்றபடி சொந்த தோட்டத்தில் நடப்பவர்கள், மாசுபடாத ஆற்றங்கரையில் நடப்பவர்கள், கடற்க்கரையில் நடப்பவர்கள் முடிந்தவரைக்கும் எச்சரிக்கையாக வெறும் காலில் நடப்பது மிகவும் ஆரோக்கியமானதே!!!
.
.
அதேபோல் எட்டு வடிவ நடை நடக்கலாமா என்றால் மூட்டுவலி, கவுட் பிரச்சனை, இல்லாதவர்கள் தாராளமாக நடக்கலாம்! ஆனால் மூட்டு எலும்பு தேய்மானம், முடக்குவாதம், போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், அதிக உடல் எடையால் அந்த பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளவர்கள் எட்டு வடிவ நடை நடப்பது உகந்தது அல்ல!
.
.
இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் எப்பொழுதும் ஒரே நேராகவும் ,சீராகவும், நல்ல மெண்மையான , மிக சரியாக காலில் பொருந்தியுள்ள சிலிக்கான் பேஸ் ஷீ- க்களை உபயோகித்து நடப்பதே நல்லது! பாதுகாப்பானது! முக்கியமாக குதிகால் வலி இருப்பவர்கள் வீட்டுக்குள்ளே கூட MCR செருப்பு அனிந்து நடப்பதை வழக்கமாக கொள்ளவேண்டும்!
.
.
இன்னொறு மிக்கியமான விஷயம் அக்குப்ரஸ்ஸர் செருப்பு என்ற வஷ்துவை சிலர் வீட்டுக்குள் அணிந்துகொண்டே இருப்பார்கள்! அது மிகவும் கெடுதல்! கட்டாயம் அதானால் இல்லாத குதிகால் வலி வந்துவிடும் ஜாக்கிரதை!!! இருந்தால் அதை தலையை சுற்றி எறிந்து விடவும்!!!
.
.
அடுத்து நடை இயந்திரத்தில் நடப்பதை பற்றிய விஷயங்களை அலசுவோம்!!!...... தொடரும்!!!

Gunaseelan

பேலியோவும் எடைபயிற்சியும்!!! ……..பாகம் ---5

.
நடை பயிற்சி…. நுனுக்கங்கள்!!!
.

யார் யார் எப்படி நடக்க வேண்டும்?
.
.
என்ன காரனத்திற்க்காக நடைபயிற்சி செய்கிறோமோ அதற்க்கேற்றார்போல் நடை இருக்க வேண்டும்!
உடல் எடை குறைப்புக்ககாக நடப்பவர்கள், குறைந்தது 5 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்! மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் இல்லையென்றால் ஏழு கிலோமீட்டர் வரைக்கும் கூட நடக்கலாம்! அதற்க்கு மேல் வேண்டாம்!
கட்டாயமாக நல்ல தரமான காலனி (ஷீ? அணிந்துதான் நடக்க வேண்டும் ! நாம் அணிந்திருக்கும் காலனி நம் காலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும்!
.
.
அதாவது அதிக இருக்கமாகவும் இருக்கக்கூடாது! மிகவும் தளர்வாகவும் இருக்க கூடாது! செருப்பு அணிந்து நடப்பது மிகவும் தவறு!
பாரதி சொன்னமாதிரி நிமிர்ந்த நடையும் நேரான பார்வையும் இருக்க வேண்டும்! கை கால்களை விரைப்பாக வைத்துகொண்டு மார்ச்சிங் செய்ய வேண்டாம்! சாதாரனமாக கைகளை வீசி நடந்தால் போதும்! உடல் இளைப்பதற்க்காக நடப்பவர்கள் ஒரே மாதிரி சீராக நடக்க கூடாது!
.
.
அடிக்கடி வேகத்தை அதிகப்படுத்தவும், குறைக்கவும், திடீரென மெதுவாக ஓடுவதும், கொஞ்சம் வேகமாக ஓடுவதும், பின் மெதுவாக நடப்பதும், இப்படி மாறி மாறி பயிற்ச்சி இருக்க வேண்டும்! முக்கியமாக நாய்கள் அதிகம் உள்ள இடத்தில் கவனமாக பயிற்சி செய்ய வேண்டும்! எச்சரிக்கை இல்லையென்றால் தொப்புளை சுற்றி ஊசி போடவேண்டியிருக்கும்! ஒரு வேளை நியாண்டர் செல்வம் ஜீ மாதிரி மரம் ஏற தெரிந்தால் தப்பிக்கலாம்!
.
.
நடக்கும் போது குதிகாலை ஊண்றி நடக்க வேண்டும், ஓடும்போது பாதத்தின் முன் பகுதியை ஊன்றி ஓட வேண்டும்! அடி வயிற்றை கொஞ்சம் இருக்கமாக வைத்துகொண்டு நடப்பது ஊளைச்சதையை சீக்கிரமாக கரைக்க உதவும்! முதுகை வளைத்து கூன்போட்டபடி நடக்க கூடாது! முழங்காலை ஒவ்வொர் எட்டி வைக்கும் போதும் லாக் செய்ய கூடாது! முழங்கால் மூட்டை எப்போதும் தளர்வாகவே வைத்திருக்க வேண்டும்! ஒவ்வொரு முறையும் லாக் செய்தால் காட்டிலேஜ் ( மூட்டு ஜவ்வு என்று சொல்லப்படும் நுண் குருத்தெலும்புகள்) பாதிக்கப்படகூடும்!
.
.
லோ சுகர் உள்ளவர்கள் கையில் சாக்லேட் வைத்திருப்பது மிகவும் முக்கியம்! இதய அடைப்பு உள்ளவர்கள் , சிகிச்சை எடுத்துகொண்டு இருப்பவர்கள் துனையில்லாமல் நடக்க கூடாது! மூட்டு ஜவ்வு தேய்மானம் உள்ளவர்கள் அதிக தூரம் நடை பயிற்சி செய்ய கூடாது! யூரிக் அமிலத்தால் எலும்பு இனைப்புகளில் சோடியம் பைரேட் படிமானங்கள் இருப்பவர்கள் அந்த பிரச்சனை தீரும் வரைக்கும் பிஸியோ பயிற்ச்சிகளை செய்துவருவது நண்மை பயக்கும்! ஓடுதல், நடத்தல் எலும்புகளில் உராய்வுகளை ஏற்ப்படுத்தி வலியை கொடுக்கும்!
.
.
நடந்துகொண்டோ , நடந்து முடித்த உடனோ கண்டதையும் சாப்பிடுவதை கட்டாயம் தவிற்க்கவேண்டும்! முக்கியமாக நடை பயிற்சி முடித்தவுடன் வென்னீரில் எலுமிச்சையும் கொஞ்சமாக உப்பும் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது! நடக்கும் முன்னால் வெதுவெதுப்பான தண்ணீர் அரை லிட்டர் வரைக்கும் குடிக்கலாம்! நடந்து முடித்தவுடன் ஆர்கானிக் க்ரீன் டீ வித் லெமன் சேர்த்தும் குடிக்கலாம்!
.
.
ஆனால் இனிப்பு எந்த வகையிலும் சேர்க்க கூடாது! முக்கியமாக செட்டியார் கடை போண்டாவை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துகொள்ள வேண்டும்! முடிந்தவரைக்கும் போண்டா, வடை போன்ற ஆரோக்கியத்துக்கு வேட்டுவைக்கும் கடை பக்கம் போகாமலயே இருப்பது நல்ல தற்க்காப்பாக அமையும்!
.
.
அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் காலையில் எழுந்தவுடன் கற்றாழை சாறு, அருகம் புல் சாறு, நில வேம்பு சாறு, மலைவேம்பு கஷாயம், இப்படியெல்லாம் அதிரடி வைத்தியத்தில் இறங்கவே கூடாது! உடல் காலையில் மெதுவாக சோம்பல் முறித்து எழும்போதே இப்படியான முரட்டு வைத்தியெமெல்லாம் செய்தால் கட்டாயம் சிறு நீரக கோளாருகள் வந்து விடும்!
.
.
அதெல்லாம் நேய்வாய்ப்பட்டவர்களுக்கான மருந்து மட்டும்தான்! ஆரோக்கியமாக இருப்பவர்கள் வருமுன் காக்க சரியான பேலியோ உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே போதும்! காலையில் வெறும்வயிற்றில் ஐஸ் வாட்டர் குடிப்பது, நடந்து முடித்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பது, பெப்ஸி , கோக் போன்ற விஷபானங்களை குடிப்பது எல்லாம் நமக்கு நாமே செய்வினை வச்சிகிறதுக்கு சமம்!
.
.
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் உடல் எடைகுறைப்பில் இல்லாமல் மெயிண்டென்ஸ் டயட்டில் உள்ளவர்கள் மட்டும் காலை நடை பயிற்சி முடிந்து ஒரே ஒரு இளனீர் சாப்பிடலாம்! அதுவும் மிகவும் உப்புபதமாக அதிகபச்சம் 200 மில்லி குடித்துவிட்டு அந்த இள நீரின் உள்ளே இருக்கும் வழுக்கையை கட்டாயம் சாப்பிட்டுவிட வேண்டும்!
.
.
ஆச்சர்யப்படும் விதமாக இந்த இள நீரும் வழுக்கையும் சாப்பிடும் போது முக்கியமான புரத அமினோ அமிலங்கள் நம் உடலுக்கு கிடைக்கும்! மேலும் இள நீர் ஒரு சுவையான டயூரடிக்ஸ் பானம்! நல்லா யூரின் போகும்! ஆனால் 200 மில்லி இள நீரில் 12 கிராம் சர்க்கரை உள்ளதை மறக்க வேண்டாம்! எனவே மெய்ன்டென்ஸ் டயட் உள்ளவர்கள் மற்றும் நான்டயபட்டிக் உள்ளவர்கள் மட்டும் தேவைப்பட்டால் குடிக்கலாம்!
.
.
பொதுவான உடல் ஆரோக்கியத்துக்காக நடப்பவர்கள் ஒரே சீரான நடை மணிக்கு நாலு அல்லது ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் போதும்! மூச்சை ஒரே சீராக நல்ல ஆழமான சுவாசம் கட்டாயம் வேண்டும்! எடை குறைக்க நடப்பவரகள் 30 வயதுக்குள் இருந்தால் இதயதுடிப்பு நிமிடத்துக்கு 120 வரைக்கும் போகலாம்! 30 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கூட ஆரோக்கியமாக இருந்தால் இதயதுடிப்பு 120 வரைக்கும் போவதில் தவறு இல்லை!
.
.
ஆனால் தொடர்ந்து அதேபோல் இல்லாமல் மீண்டும் இதய துடிப்பு குறையுமாறு நடையின் வேகத்தை மட்டுப்படுத்தவும் மறுபடியும் வேகப்படுத்தவும் மாறி மாறி செய்ய வேண்டும்! உடலை எந்த ஒரு பயிற்ச்சிக்கும் நிரந்தரமாக பழக்கப்படுத்த விடவே கூடாது! தொடர்ச்சியான குழப்ப நிலையிலேயே வைத்திருந்தால்தான் கொழுப்பு தொடர்ந்து எரிக்கப்பட்டு கொண்டே இருக்கும்!
.
.
ஒரே மாதிரியான பயிற்ச்சிக்கு உடல் பழக்கப்பட்டு விட்டால் பின் கொழுப்பு எரிக்கப்படுவது குறைந்துவிடும்…. அதனால்தான் சில தொழிற்ச்சலைகளில் கடினமாக வேலை செய்பவர்கள் கூட குண்டர்களாக இருப்பதை பார்க்கிறோம்!! ஆக உடலை ஒரே மாதிரியான உடற்பயிற்ச்சிக்கு பழக விடாமல் எந்த பயிற்ச்சியாக இருந்தாலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிகொண்டே இருக்க வேண்டும்! உடல் வாகை பொருத்து அதிக பட்சம் 6 மாதம் ஒரே மாதிரியான பயிற்சியை செய்யலாம்!!
.
.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டும் பயிற்சியும் சேர்த்து செய்யலாம்! சைக்கிள் வாங்கும் போது சங்கர் ஜீ-யின் சைக்கிளை போன்று நல்ல தரமான சைக்கிளாக வாங்க வேண்டும்! கட்டாயம் ஹெல்மெட் அனிய வேண்டும்! மூட்டுகளை க்ரிப் பேண்டேஜ் மூலம் கவர் செய்வது நல்லது! நடப்பதை போன்றே சிறிது நேரம் மெதுவாகவும் சிறிது நேரம் வேகமாகவும் மாற்றி மாற்றி செய்தால் உடல் கொழுப்பு வேகமாக தொடர்ந்து எரிக்கப்படும்! நான் 2002-ம் வருடம் சைக்கிளில் கரூரில் இருந்து கோவை வடவள்ளி சென்று மீண்டும் கரூர் வந்தேன்! மூன்று நாளில் நான் சைக்கிளில் கடந்த தூரம் சுமார் 400 கிலோ மீட்டர்! ………………………………………………………………………………………………………………….. இன்னும் நடக்கலாம்!!!



Gunaseelan

எடைபயிற்சியும் பேலியோவும்!-- பாகம் – 4

நடந்தால் நன்மையே! ……


.
.
எங்கு நடக்கலாம்?
.
.
பாதுகாப்பான ஒற்றையடி பாதை, குளக்கரை, வயல், தோட்டம் ஒட்டியுள்ள பாதை, மரங்கள் இருபுறமும் உள்ள அதிகம் வாகன போக்குவரத்து இல்லாத பாதை, கிராம சாலைகள், மலைப்பாதை, நகரங்களில் உள்ள பூங்கா, கடற்கரை , மரங்கள் உள்ள மைதானங்கள், ஆற்றங்கரை, இங்கெல்லாம் நடைபயிற்சி மேற்க்கொள்ளலாம்!
.
.
எங்கு நடக்க கூடாது?
.
கண்டிப்பாக ஹைவேஸில் நடக்க கூடாது! தொழிற்சாலை கழிவுகள் தேங்கியுள்ள இடம், அதிக புகை வெளியிடும் தொழிற்ச்சாலைகள் உள்ள இடம், பஞ்சு, நூல் மில் அருகில், பெயிண்ட் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் உள்ள இடங்கள், அதிக மண் மற்றும் தூசிகள் பறக்கும் இடங்கள், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள், ஜன சந்தடி மிகுந்த சந்தை , மார்க்கட் , மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், சாக்கடை நீர் தேங்கியுள்ள இடங்கள், இங்கெல்லாம் நடை பயிற்சி செய்யக்கூடாது!
.
.
ரொம்ப முக்கியமான விஷயம் சிலர் வீட்டுக்குள்ளேயே பூனைமாதிரி ஹாலுக்கும் கிச்சனுக்கும் நடப்பார்கள்!!! அது கூடவே கூடாது!முக்கியமாக கார்ப்பரேஷன் குப்பை எரிக்கும் பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தள்ளித்தான் நடக்க வேண்டும்! இல்லையென்றால் புற்று நோயை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்! குப்பையை யார் எரித்தாலும் ஒரு குழுவாக சேர்ந்து கண்டிக்கவும், தட்டிகேட்கவும் செய்தால் அந்த மாசில் இருந்து நம் சந்ததியை காப்பாற்ற முடியும்!
.
.
யாரோடு நடக்க கூடாது?
.
வயதானவர்கள், நோயாளிகள், கை கால் அடிபட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், குழந்தைகள், ஆகியோர்களோடு நடை பயிற்சி செய்ய கூடாது! நமது வேகமும் கவனமும் தடைபடும்! அவர்களுக்கு உதவ வேண்டுமானால் அதெற்கென நேரம் ஒதுக்கி உதவி செய்யலாம்!
.
.
யாரோடு நடக்கலாம்?
.
சம வயது உடையவர்கள், ஆத்மார்த்தமான நண்பர்கள், உங்களோடு மனரீதியாக ஒத்து போகிறவர்கள், பாஸிட்டிவான எண்ணம் கொண்டவர்கள், உற்சாகமாக நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள், உங்களை விட வயதில் சிறியவர்கள், ஆகியவர்களோடு நடக்கலாம்! ஆனாலும் தனியாக நடப்பதே உத்தமம்! மனைவியோடு நடப்பது ஆபத்து! காரணம் கேட்க வேனாம்! ஏன்னா என் வொய்ஃப் இத படிப்பாங்க! அப்புறம் எனக்கு பேலியோ வாத்து கிடைக்காம போயிரும்! அவங்கவங்க அனுபவத்தை வச்சி யூகிச்சுகோங்க!
.
.
எந்த நேரத்தில் நடக்கலாம்?
.
அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நடை பயிற்சியை முடித்து விட வேண்டும்! அந்த நேரம் நல்ல ஆக்ஸிசன் கிடைக்கும்! காற்றில் மாசு மிகவும் குறைவாக இருக்கும்! மாலை 5 மணிக்கு மேல் உங்கள் வசதியை பொருத்து நடக்கலாம்! கட்டாயம் மதிய வெய்யிலில் நடக்க கூடாது! வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் மட்டும் மதிய வெயிலில் அதிக பட்சம் 15 நிமிடம் நி்ற்கலாம்!
.
.
தலையை ஈர துனியால் மூடிகொள்ளலாம்! பதினைந்து நிமிடத்துக்கு மேல் நிற்ப்பது ஆபத்து! அதாவது சூரியன் என்பது அப்பட்டமான ஹட்ரஜன் குண்டுதான்! நாம் வெடிக்கும் அனுகுண்டுக்கு பெரியப்பா வகை! ஜப்பானில் வெடிக்கப்பட்ட அனுகுண்டை விட பல ஆயிரம் மடங்கு சக்தியுடைய அனுவெடிப்பானது சூரியனில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்!
.
.
அதனால் தான் சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சூரியனின் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது! இதில் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் துருவ பகுதிகளிலும், இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு மேல் பகுதியிலும் சூரிய கதிர்வீச்சில் இருந்து நம்மை காக்கும் ஓசோன் பாதுகாப்பு படலம் அதிகம் சேதமாகியுள்ளது! இந்த ஓட்டையானது நம் கீழடுக்கு வளிமண்டல எல்லைக்குள்ளே இருப்பதால் பூமியோடு சேர்ந்து அந்த ஓசோன் மண்டல ஓட்டையும் சுற்றிகொண்டேதான் வரும்!
.
.
ஆக எப்போதுமே இந்திய சீன நாடுகளில் பகல் நேரங்களில் அல்ட்ரா வயலட் ரேஸ் என சொல்லப்படும் புற ஊதா கதிர்கள் , ரேடிய கதிர்வீச்சுகள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் போன்ற ஆபத்தான கதிர்வீச்சுகள் இருந்துகொண்டே இருக்கும்! அது காலை மற்றும் மாலை வேளைகளில் மிக குறைவாகவும் மதிய வேளையில் அதிகமாகவும் இருக்கும்! எனவேதான் உச்சிவெயில் உடம்புக்கு ஆகாது! அதனால் கண்டிப்பாக கண்னுக்கு நல்ல தரமான கருப்பு கண்ணாடி போட்டுகொள்ள வேண்டும்! பின் நல்ல தண்னீரில் குளித்துவிட வேண்டும்!
.
.
மேலும் காலை மற்றும் மாலை வெயிலில் தூரத்து அகச்சிவப்பு கதிர்கள் எனப்படும் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய இன்ஃப்ரா ரெட் ரேஸ் செறிவாக இருக்கும்! எனவேதான் காலை மாலை நடை பயிற்ச்சி செய்யும் போது ஒளி ஊடிருவக்கூடிய மெல்லிதான சட்டை போட்டு நடப்பது நல்லது!
.
.
அதேபோல் அர்த்த ஜாமத்தில் நடைபயிற்சி செய்வதும் கூடாது! புளிய மரங்கள் அடர்த்தியாக உள்ள சாலைகளில் நடப்பதை தவிர்ப்பது நல்லது! காரணம் பிசாசு அல்ல! அறிவியல் பூர்வமாக சில மரங்கள் சில நச்சு வாயுக்களை வெளிவிடும்! அதில் புளி, வேலிக்கறுவை போன்ற மரங்கள் முதலிடம் வகிக்கின்றன! பார்த்தீனியம் செடிகள் அதிகம் உள்ள இடங்களும் மூச்சு அலர்ஜியை ஏற்ப்படுத்தும்! மற்ற மரங்கள் நல்லது!! ............ இன்னும் நடக்கலாம்!!!

எடைபயிற்சியும் பேலியோவும்! ----- பாகம்- 3 ( அனுபவ தொடர்)


நடையா? இது நடையா???

உடற்பயிற்சி என்றால் என்ன? நடை பயிற்சி என்றால் என்ன? எடை பயிற்சி என்றால் என்ன? உடற்பயிற்சி என்பது பொதுவான சொல்! உடற்பயிற்சியில் ஒரு வகைதான் நடை பயிற்சி! உடற்பயிற்சியில் இன்னொரு வகை எடை பயிற்சி! இவைகள் மட்டுமே முக்கியமாக பரிந்துரைக்கப்படும் பயிற்சிகள்!
.
.
நடை பயிற்சி-ன்னா என்னான்னு முதல்ல பார்ப்போம்! நடை பயிற்சி என்ற வார்த்தையே இந்த நூற்றாண்டின் வார்த்தையாகத்தான் இருக்கும்! ஏன்னா நடைக்கு பயிற்சி எடுப்பது பெரும்பாலும் ஒரு வயது குழந்தைதான்! போன நூற்றாண்டில் மனிதனின் நடையை ஒழித்துகட்டும் கார், பஸ், பைக், டிவி, கம்யூட்டர், வீடியோகேம்ஸ், இண்டெர் நெட், பேஸ் புக், வாட்ஸ் ஆப், இத்தியாதியெல்லாம் இல்லவே இல்லை! ஆக இதெல்லாம் எப்ப வந்ததோ அப்ப கூடவே வந்தது தான் நடைபயிற்சி!
.
.
சரி! அதை விடுங்க! நமக்கு ஏன் நடைபயிற்சி தேவைப்படுது? தேமேன்னு கண்ணுல கண்டதயெல்லாம் தின்னுட்டு வீட்டுலயே உக்கார்ந்து உலகத்துல இருக்கர எல்லா வியாதியயும் வரவழைச்சு, பின் ஊர் உலகம் பூராவும் விசாரித்து கடைசியாக ஒரு டாக்டரிடம் போவோம்! அவர்தான் உங்கள் நடை பயிற்சியின் காரணகர்த்தா! அதுவும் நோயாளி கிராமத்தானா இருந்துட்டா டாக்டர் நிலைமை கவலைக்கிடமாக போய்விடும்! பெரும்பாலும் எல்லா ரிப்போர்ட்டையும் பார்த்துட்டு கடைசியா டாக்டர் நோயாளியிடம் இதைத்தான் சொல்லுவார்!
.
.
உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குங்க!....... டாக்டர்???? எனக்கு சர்க்கரை சாப்பிட்டா கீரிபூச்சி வந்துடும்னு அத நான் தொட்டுகூட பார்க்கரதில்லை டாக்டர்!.... அப்படியா? அது காரணமில்லைங்க! உங்க உடம்புல இன்சுலின் அப்படீன்னு ஒரு ஹார்மோன் சுரக்கறது கம்மியாயிடுச்சு! அதனால சர்க்கரை நோய் வந்துடுச்சி! ஒன்னும் பயப்பட வேண்டாம்! இந்த மருந்து தொடர்ந்து சாப்பிடுங்க!
.
.
தினமும் காலையில் வாக்கிங் போகனும்ங்க! சரிங்க டாக்டர்….. எவ்வளவு தூரம் போகனும் டாக்டர்? சராசரியா மணிக்கு அஞ்சு கிலோ மீட்டர் வேகத்துல ஒரு நாளைக்கு அஞ்சு கிலோ மீட்டர் நடக்கனும்! சரிங்க டாக்டர்! கரூர்-ல இருந்து நடக்க ஆரம்பிச்சா தினமும் அஞ்சு கிலோமீட்டர் நடந்தா 15 நாள்ல திருச்சி வரைக்கும் போயிரலாம் டாக்டர்! அப்புறம் அங்க இருந்து எங்க போகனும் டாக்டர்? இடையில சாப்பாட்டுக்கு என்ன பன்றதுங்க டாக்டர்? டாக்டர் பேஷண்டுக்கு விளக்கம் சொல்றதுக்குள்ள டாக்டருக்கு சுகர் வந்துடும்!
.
.
ஆக இப்படித்தான் நடை பயிற்சி என்ற விஷயம் ஏதோ ஒரு மருத்துவரால்தான் ஆரம்பித்து இருக்கும்! இப்போது நாமும் வாக்கிங் போற நிறையப்பேரை பார்க்கிறோம்! காலை 5 மணிக்கு எழுந்து அவசரமா கிளம்புவாங்க! அதுவும் சில அலப்பறைகள் அடிடாஸ், வுட்லேண்ட்ஸ் ஷீ இல்லாம வாக்கிங் போக மாட்டாங்க! அதுவும் தனியா இல்லை! ஒரு ஊரையே கூட்டிக்குவாங்க!
.
.
ஊர் உலகத்துல இருக்கற அத்தனை குடும்பத்தின் கதையும் பேசிகிட்டு ஏதோ ஜாலி ட்ரிப் போற மாதிரி ஒரு உல்லாச நடை! பக்கத்து ரோட்ல இவங்க குடும்ப கதைய இன்னொரு க்ரூப் பேசி சிரிக்கற விஷயம் இவங்களுக்கு தெரியாது! இப்படியே ஒரு அஞ்சு ஆறு கிலோமீட்டர் நடந்து முடிச்சப்புறம் படு விபரமா ஆரோக்கியத்தின் அத்தியாவசிய திறவுகோலான செட்டியார் கடை போண்டாவோடுதான் அந்த வாக்கிங் முடிவுக்கு வரும்! போண்டா ஒவ்வொன்றும் அனுகுண்டு சைஸுக்கு இருக்கும்!
.
.
அதுவும் சூரியகாந்தி எண்ணய், ரீஃபைண்ட் எண்ணெய் , தவிட்டு எண்ணெய், எல்லாம் கலந்த ஒரு வஷ்துவில் சுட்ட அந்த போண்டாவில் நியூட்ரிஷனல் வேல்யூ எல்லாம் எப்பேர்ப்பட்ட விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாது! சட்டியில் எண்ணெய் குறைய குறைய எந்த எண்ணெய் அப்போது கையில் இருக்கிறதோ அதை கூட சேர்த்து சுட்டுகொண்டே இருப்பார்கள்! எனக்கு தெரிந்து அந்த ஒரு போண்டா மட்டும் 500 கலோரி தரும்!
.
.
அதோடு அந்த காலாவதியான எண்ணெயால் வரும் சீர்கேடுகள் எல்லாம் போனஸ்! அதோடு வாக்கிங் முடியாது! கூடவே ஒரு டீ! டீன்னா எப்படிப்பட்ட டீ தெரியுமா? , முக்கால் வாசி தண்ணீர் கலந்த ஜவ்வரிசி ஊரவைத்த பால், அதில் ரெண்டு ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் சாயம் கலந்த புளியங்கொட்டை தூளோடு போனா போவுதுன்னு கலக்கப்பட்ட நாலந்தர டஸ்ட் டீத்தூள், இதெல்லாம் கலந்து பூச்சிமருந்து எவ்வளவோ பரவாயில்லைங்கர மாதிரியான ஒரு டீ!
.
.
இன்னும் பாலில் கலக்கப்பட்ட மாவுசோடா, பாலில் கலந்த தன்ணீரை மறைக்க சர்க்கரை, இதெல்லாம் அந்த கடைக்கு பால் ஊற்றும் பால்காரன் அவன் பங்குக்கு செய்யும் கைங்கர்யம்! இன்னும் நிறைய இருக்கு! நான் ஒரு முன்னால் மில்க் வாலாவும் கூட என்பதால் தொழில் தர்மம் கருதி அதை முழுமையாக சொல்ல விரும்பவில்லை!
.
.
அதுமட்டுமா? வாக்கிங் போகும் போது சாலைகளில் போகும் வாகனங்கள் கக்கும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற விஷப்புகை! மற்றும் ஒவ்வொரு தெரு முக்கிலும் கர்மசிரத்தையாக நம் துப்புறவு பணியாளர்கள் எரிக்கும் பிளாஸ்டிக் குப்பையினால் வெளிப்படும் பென்சீன் போன்ற விஷ வாயுக்கள், இப்படி மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடிய அத்தனை விஷயங்களும் வாக்கிங்கில் இலவச இனைப்பாக கிடைக்கும்!
.
.
இப்படியெல்லாம் உடம்பை குப்பைத்தொட்டியாக்கி சீரழித்து விட்டு எதுவுமே தெரியாத அம்மாஞ்சி போல ஒரு மாசம் கழிச்சு டாக்டர் கிட்ட போய் ரொம்ப பெருமையா சொல்லுவாங்க! டாக்டர்! நீங்க சொன்ன நாள்ல இருந்து தினமும் வாக்கிங் போரேன் டாக்டர்! மாத்திரை தவறாம சாப்பிடுறேன் டாக்டர்! எனக்கு சர்க்கரை வியாதி குணமாகி இருக்குமா டாக்டர்?
.
.
இவர் அமுக்கிய செட்டியார் கடை போண்டாவையும், குடித்த ரசாயன டீயையும் மட்டும் சொல்லவே மாட்டார்! ஓ…. போய் ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு வாங்க! வந்தவுடன் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்த டாக்டர் மயங்கி விழ நிறையவே சாத்தியம் இருக்கு!
.
.
இப்படித்தான் நிறைய பேர் நீரிழிவுக்கு மருந்து சாப்பிட்டு நாசமாய் போறாங்க! சரி! அது போகட்டும்! ஆக இப்படி மருத்துவ பெருந்தகைகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு விஷயம்தான் செல்லமாக வாக்கிங் என கிராமத்தானாலும் அழைக்கப்படும் நடை பயிற்சி!
.
.
சரி! இந்த நடை பயிற்சியை எப்படி செய்யனும்! இதை செய்வதால் நமக்கு என்ன லாபம்? இதனால் நம் உடலுக்குள் நடக்கும் விஷயம் என்ன? யாரெல்லாம் நடை பயிற்சி செய்யலாம்? யாரெல்லாம் நடை பயிற்சி செய்யக்கூடாது? எங்கே நடை பயிற்சி செய்ய வேண்டும்? ட்ரெட் மில் எனப்படும் நடை இயந்திரத்தில் நடக்கலாமா? இதற்க்கான பதிலை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்! ……………………….. தொடரும்!!!

எடைபயிற்சியும் பேலியோவும்! அனுபவ கட்டுரை தொடர் !!! பாகம் – 2




வலியின்றி வளர்ச்சி இல்லை என்பது எடைப்பயிற்சி பழமொழி! ……….. வலியின்றி வளர்ச்சி உண்டு!!! இது பேலியோ புது மொழி!!! குழப்பமாக இருக்கிறதா? பதில் அறிவியல்பூர்வமானது! எல்லோருக்கும் ஆர்னால்டு போல ஆகவேண்டும் என்ற நப்பாசை ஜிம்முக்குள் நுழைந்ததுமே வந்துவிடும்! ஒரு புதிய நபர் உடற்பயிற்ச்சி சாலைக்கு செல்கிறார்! உள்ளே நுழைந்தவுடன் அங்க இருக்கும் தம்பிள்ஸ்தான் அவர் எடுக்கும் முதல் ஆயுதம்! அதை கையில் எடுக்கும்போதே மனசு ஆனழகன் கனவில் மிதக்க ஆரம்பித்துவிடும்!!!
.
.
எடுத்த எடுப்பிலேயே ஆர்வமிகுதியால் ஒவ்வொரு கைக்கும் 100- லிருந்து 150 ரெப்ஸ் ( முறைகள் ) தம்பிள் ஃப்ரண்ட் கர்ல் செய்துவிடுவார்! அதோடு விடுவாரா என்றால் இல்லை! போய் பெஞ்ச்ப்ரஸ்ஸில் படுத்துகொள்வார்! நெஞ்செல்லாம் சிவக்கும் வரைக்கும் பெஞ்ச் ப்ரஸ்சில் மல்லுகட்டுவார்! பிறகு லாட்ஸ் புல் டவுன் பாரில் ஒரு அரைமணி நேரம் லாட்ஸ்க்கு பயிற்ச்சி ! அது புல்லிங் மூவ்மெண்ட் ஆதலால் அப்போது களைப்போ வலியோ தெரியாது! அதோடும் முடியாது! வேறு ஏதாவது பயிற்ச்சிகைளையும் செய்துவிட்டு கண்னாடிக்கு முன் தன் கொளுக்மொழுக் கைகளை பைஸப்ஸ் பம்ப் ஆகியிருக்கா என பார்ப்பதுதான் காமடியின் உச்சம்! இது பெரும்பாலும் ட்ரெயினர் இல்லாத மத்தியதர ஜிம்மில் தான் அதிகமாக நடக்கும்!
.
.
அவ்வளவுதான்! அன்று இரவு நேரா ஹோட்டலுக்கு போய் ரெண்டு ஆஃப்பாயிலும் அஞ்சு பரோட்டாவும் சாப்பிட்டுவிட்டு போய் படுக்கும் மாப்பிளைக்கு நைட் கனவில் ஆர்னால்டு நிச்சயம் வந்துவிடுவார்!! மறு நாள் காலை எழும்போதுதான் நரகம் தெரியும்! டேக் ஆஃப் ஆகும் ப்ளேன் மாதிரி கையை ரெண்டுபக்கமும் விரித்துகொண்டு கையை மடக்கவோ நீட்டவோ முடியாது! மீறி முயற்ச்சி செய்தால் வலியில் கும்பிபாகம் கண் முன்னாடி காட்சியளிக்கும்!
.
.
உடனே அந்த ஜிம் மாஸ்ட்டருக்கு நம்ம கதா நாயகன் போன் போட்டு நேத்து அப்படி இருந்த நான் இன்னிக்கு இப்பிடி ஆயிட்டேன் சார் என புலம்பும் போது அந்த ஜிம் மாஸ்டர் சொல்லும் பொன்மொழிதான் ’’வலியின்றி வளர்ச்சியில்லை’’ !!!!! ஆனால் வலியில்லாமல் வளர்ச்சியில்லையா ? அப்படின்னு கேட்டால் வலியில்லாமல் வளர்ச்சி உண்டு என்பதே பதில்! ஆம்! அது பேலியோவில் மட்டுமே சாத்தியம்! எப்படி??? அதற்க்கு உடற்பயிற்ச்சி செய்யும் போது என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டும்!
.
.
நாம் ஒரு ஜிம்மில் போய் தம்பில் ஃப்ரண்ட் கர்ல் செய்ய்வதாக வைத்துகொள்வோம்! நம்முடைய கை தசையின் தாங்குதிறன் 5 கிலோ என்றால் நாம் நான்கு கிலோ எடையில் 100 ரெப்ஸ் தம்பிள் ஃப்ரண்ட் கர்ல் செய்தாலும் மறு நாள் நமக்கு வலியும் பெரிதாக இருக்காது! கையில் எந்த மாற்றமும் நிகழாது! கொஞ்சம் கலோரி மட்டும் செலவாகும்! அதே சமயம் எட்டு கிலோ எடையுள்ள தம்பிள்ஸ் எடுத்து வெறும் 50 ரெப்ஸ் செய்தாலும் கை தசை செல்கள் உடைய ஆரம்பிக்கும்! கொஞ்சம் கொஞ்சமாக எட்டுகிலோவிற்க்கும் கை தசைகள் வித்ஸ்டேண்டிங் கெப்பாசிட்டியை டெவலப் செய்து கொள்ளும்!
.
.
அதனால் நாள் ஆக ஆக மேலும் எடையை கூட்டி செய்ய வேண்டும்! இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும்! இப்பிடியே எடையை கூட்டி செய்ய ஆரம்பித்தா;ல் இரண்டு வருடம் கழித்து 60 கிலோ தம்பிள் கர்ல் செய்ய முடியுமா? இந்த சந்தேகம் எல்லோருக்கும் வரும்! ஒரு குறிப்பிட்ட மாதங்கள் ஆன பின் பயிற்சியை மாற்றவேண்டும்! அதாவது தம்பல் ஃப்ரண்ட் கர்ல்-க்கு உடல் பழக்கப்பட்டுவிட்டால் பார்பெல் ஃப்ரண்ட் கர்ல் செய்ய வேண்டும்! அதிலும் கை பழக்கப்படும் போது ez- பாருக்கு போய்விடவேண்டும்! குறைந்த பச்சம் நான்கு மாதமும் அதிக பச்சம் ஆறு மாதத்திற்க்கு மேலும் ஒரே விதமான பயிற்சியை செய்யகூடாது! ஒரே தசை தொகுதிக்கு வேறு வெறு பயிற்சியை குறிப்பிட்ட கால அளவில் மாற்றி மாற்றி செய்யும்போதுதான் தசைகள் வேகமாமவும் சீராகவும் வளர்ச்சிபெறும்! தசை செல்கள் உடைவதும் வளர்வதும் தொடரும்!
.
.
அந்த உடைந்த செல்கள் வளரும்போதுதான் பைசப்ஸ் பெரிதாக வளர ஆரம்பிக்கும்! ஒவ்வொரு முறையும் நாம் கடுமையான பயிற்ச்சி செய்யும் போது மேலும் மேலும் தசைச்செல்கள் உடைவதும் அது இரண்டு செல்கள் நான்காகவும் நான்கு செல்கள் எட்டாகவும் பெருக பெருக உடல் தசைகள் மளமளவென வளர ஆரம்பிக்கும்! ஆனால் இதில் மிகவும் முக்கியமான விஷயம் ஒவ்வொரு உடற்ப்பயிற்சிக்கு பின்னும் பேலியோ உனவு எடுப்பவர்களுக்கு தசை சிதைவை தடுக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடெண்டுகள் தேவையான அளவு கிடைப்பதாலும், உடைந்த செல்கள் வளர்வதற்க்கு தேவையான மிக அருமையான எஸென்ஸியல் புரத அமினோ அமிலங்கள் உனவின் மூலம் கிடைத்து விடுவதாலும் உடைந்த தசைச்செல்கள் உடனடியாக வளர துவங்குகிறது! மேலும் நமக்கு அதிகப்படியான கொழுப்பு உணவில் இருப்பதால் நீண்ட நேரம் பயிற்சி செய்ய உடலுக்கு பவர்சப்ளை இருந்துகொண்டே இருக்கும்!
.
.
ஆகவே நாம் எந்த தசைதொகுதிக்கு பயிற்சி செய்கிறோமோ அந்த தசை பகுதியில் வலி அதிகம் இருக்காது! மேலும் நாம் சாப்பிடும் பசுமஞ்சள், துளசி, பாதாம், பூண்டு போன்ற உனவு பொருட்கள் உள்காயங்களை உடனுக்குடன் ஆற்றிவிடுவதால் வலியே இருக்காது என சொல்லலாம்! அதாவது பேலியோ டயட்டில் இல்லாதவர்களை விட பேலியோ டயட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும் தசைவலி என்பது மிக சொற்ப்பமே! ஆனால் பேலியோ டயட்டில் இல்லாமல் காமன் மேன் டயட்டில் இருந்து கொண்டு மேற்க்கூறிய உடற்ப்பயிற்ச்சியை செய்யும் போது உடைந்த செல்களுக்கு போதுமான சரிவிகித புரதம் கிடைக்காமலும், உள்ளே ஏற்ப்படும் உள்காயங்களுக்கு ஆண்ட்டி இன்ஃப்ளமேஷன் உணவுகள் கிடைக்காமலும் போவதால் ரத்தத்தில் ஃப்ரீரெடிகல்ஸ் அதிகமாகி தசைச்செல்கள் சிதைந்து போய் மிக பயங்கரமாக வலியெடுத்துவிடும்!
.
.
இந்த வலியை தாங்கிகொண்டேதான் காமன்மேன் டயட்டில் உடற்ப்பயிற்சியை தொடர்ந்து செய்கிறார்கள்! நூற்றுக்கு 90 பேர் பாதியிலேயே ஜிம்மை விட்டு ஓட்டமாய் ஓடுவதும் தாங்கமுடியாத தசைவலியால் தான் நடக்கிறது! ஆகவே பேலியோ இளைஞர்களே! நீங்கள் தைரியமாக உடற்பயிர்ச்சி செய்யுங்கள்! நிச்சயம் சரியான அசைவ பேலியோ டயட் ஃபாலோவ் செய்பவர்களுக்கு வலியின்றி தசைவளர்ச்சியை அட்டகாசமாக பெற முடியும் என்ற பதிலோடு இரண்டாம் பாகத்தை நிறைவு செய்கின்றேன்! இவ்வளவு நேரம் ஆர்வமாக சொல்லிட்டு கடைசியில் அசைவ பேலியோ-வினர் மட்டும்தான் கட்டழகு தசைகளை பெற முடியுமா??? சைவ பேலியோவினர் ஜிம் பக்கமே போக கூடாதா? என கேட்க்கும் அன்பர்களுக்கு உண்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றால் ஆம் என்பதுதான் உண்மையான பதிலாக இருக்கும்!
.
சைவ பேலியோ நண்பர்கள் விடாப்பிடியாக நான் ஆனழகன் ஆகியே தீரவேண்டும் என்று விரும்பினால் அது சுத்தமாக முடியாது என சொல்லத்தேவையில்லை! சரிவிகித புரத உனவு எடுப்பதில் இமாலய கவனம் செலுத்தவேண்டும்! மேலும் தவிற்க முடியாத சில நேரங்களில் புரத சப்ளிமெண்ட்டுகள் எடுக்கவேண்டிவரும்! இது சைவ பாடிபில்டர்களுக்கு மட்டுமே! அட நான் ச்சும்மா ஜென்ரல் ஹெல்த்துக்காக ஜிம் போறேன் –ன்னு சொல்ரவங்க சைவ பேலியோவில் இருந்துகொண்டு மிதமான உடற்ப்பயிற்ச்சிகளை தாராளமாக செய்யலாம்! ””ஆரோக்கியமே மஹாபாக்யம்”” ……………… தொடரும்!!!

எடைபயிற்சியும் பேலியோவும்! அனுபவ கட்டுரை தொடர் !!! பாகம் -1


.
எச்சரிக்கை! இது உடலில் உயர் இரத்த அழுத்தம், மிகு மற்றும் குறைந்த சர்க்கரை நோய், இதய நோய் , சிறுனீரக கோளாறு, முடக்குவாதம், மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கடைபிடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள படுகிறார்கள்! மீறி செய்து ஏற்ப்படும் விளைவுகளுக்கு குழுவோ கட்டுரையாளரோ பொறுப்பு ஏற்க இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்!
.


.

பேலியோ டயட்டில் இருந்து கொண்டு கடுமையான உடற்பயிற்ச்சி செய்துவருபவர்களுக்கு உடல் எடை குறைவு என்பது மெதுவாகவே நடக்கும்! ஆனால் அதே பேலியோ டயட் எடுத்துகொண்டு மிதமான நடைபயிற்ச்சி மட்டும் செய்பவர்கள்களுக்கு எடை இழப்பு வேகமாக ஏற்படும்! கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான் உண்மை! 
.
.
ஏனென்றால் பேலியோ டயட்டில் இருப்பவர்கள் மிக தரமான அதிக அளவு புரோட்டீனும் கொழுப்பும் எடுக்கிறார்கள்! இப்படி ஹை எஸன்ஸியல் ப்ரோட்டீன் எடுத்துகொண்டு நடைபயிற்ச்சியோடு சேர்ந்து ஜிம்மில் கடுமையான எடைபயிற்ச்சிகள் செய்யும்போது உடலில் இரண்டு விதமான வேலைகள் நடக்கும்! ஒன்று கொழுப்பு வேகமாக கரையும்! ஆனால் இன்னொருபக்கம் உடற்பயிற்சியால் தசைகள் வேகமாக வளரும்! 
.
.
எந்த அளவுக்கு கடுமையான பயிர்ச்சியினால் தசை செல்கள் பிளவு படுகிறதோ அந்த அளவுக்கு தசைகளின் வளர்ச்சி வேகமாக நடக்கும்! அதாவது ஒரே நேரத்தில் கொழுப்பு எடை குறையவும் தசைகளின் எடை கூடவும் செய்வதால் நமக்கு எடை இழப்பு அதிகம் இருக்காது! ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் சென்று பார்த்தால் அவர்கள் உடல் கொழுப்பு அனைத்தும் எரிக்கப்பட்டு அழகான தசை திரள்களுடன் கட்டுடலாக காட்சியளிப்பார்கள்! 
.
.
இவர்கள் எடைகுறைப்பு நிகழவில்லையே என குழம்ப தேவையில்லை! போதாகுறைக்கு நாம் சாப்பிடும் பாதாம் பருப்பு, பசு மஞ்சள், துளசி, பூண்டு, போன்றவை தசைகளில் ஏற்ப்படும் சிதைவை உடனுக்குடன் சரிசெய்து விடுவதால் மற்ற உணவு முறைகளை விட பேலியோ டயட் எடுத்துகொண்டு எடைபயிற்ச்சி செய்பவர்கள் வேகமாக கட்டுடலை பெறுவார்கள்! 
.
.
மேலும் கடுமையான உடற்பயிற்சியின் போது உடலில் சுரக்கும் கார்டிசால் மற்றும் ஃப்ரீரேடிகல்ஸ் போன்ற தீங்குவிளைவிக்கும் நச்சுபொருட்கள் நாம் எடுத்துகொள்ளும் ஆண்ட்டிஆக்ஸ்டெண்டுகளால் உடனுக்குடன் துப்புறவு செய்யப்படுவதால் பேலியோ டயட் பாடிபில்டர்களுக்கு ஒரு மிகச்சிறந்த டயட்டாக இருக்கும் என்பதில் துளியளவும் சதேகமில்லை!
.
.
பேலியோ டயட்டில் இருப்பவர்கள் வெருமனே நடைபயிற்ச்சி மட்டும் செய்யும் போது உடலில் உள்ள கொழுப்பு மட்டும் வேகமாக கரையும்! ஆனால் தசை வளர்ச்சி என்பது இருக்காது! அதனாலயே அவர்கள் மிக விரைவான எடை இழப்புக்கு ஆளாகிறார்கள்! உடல் முழுதும் திரள் திரளாக தசை வளர்ச்சி பெற்றவர்கள் உடலில் மீண்டும் கொழுப்பு சேர்வது கடினம்! 
.
.
ஆனால் தசை திறள்கள் இல்லாது எடை குறைபவர்கள் டயட்டை கைவிட்டால் சொற்ப காலத்திலேயே மளமளவென எடை கூடிவிடுவார்கள் என்பதும் உண்மையே! ஏனென்றால் தசைதிரள்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு அந்த தசை அழியாமல் பாதுகாக்க உடல் தன்னிச்சையாக உடலில் சேரும் கொழுப்பை எரித்துகொண்டே இருக்கும்! இந்த ஆட்டோ ஃபேட்பர்னிங் மெட்டபாலிசம் உடல் இளைத்து எலும்பும் தோலுமாக இருப்பவர்களுக்கு நடக்காது! 
.
.
அவர்களை பொருத்தமட்டில் டயட்டில் இருந்தால் எடை மெயின்ட்டென் ஆவதும் டயட்டை நிருத்தி காமன்மேன் டயட்டுக்கு மாறியவுடனே எடை கூடுவதும் தவிற்க்கமுடியாத விஷயமே! ஆனால் கடுமையான எடைபயிற்ச்சி என்பது எல்லா வயதினர்களுக்கும் சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! 
.
.
உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து 40 வயதுக்கு கீழ் இருந்தால் தகுந்த எடைபயிற்ச்சி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்று தாராளமாக ஜிம்மில் பயிற்ச்சி பெறலாம்! சாதகமான மரபனுவும் நோயற்ற உடல் வளமும் கொண்டவர்கள் 50 வயதிலும் தாராளமாக முயற்ச்சிக்கலாம்! 
.
.
ஆரோக்கியமான கட்டுடல் என்பது எல்லோருக்கும் நிச்சயம் சாத்தியமே! இனி வரும் பாகங்களில் ஆரம்ப நிலை எடைபயிற்ச்சிகளையும் அதன் செய்முறைகளையும் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறேன்!

Gunaseelan