Showing posts with label Ketosis. Show all posts
Showing posts with label Ketosis. Show all posts

Friday, November 4, 2016

உள்ளுறுப்புக்கள் என்னென்ன சாப்பிடலாம்? என்னென்ன நன்மைகள்?


ஈரல்- வைட்டமின் ஏ..பி வைட்டமின்களின் கோட்டை. கொலஸ்டிரால் நிரம்பிய அதியற்புத வைட்டமின் கோட்டை இது. வாரம் ஒரு நாள் கட்டாயம் ஈரல் சாப்பிடணும்
கிட்னி- இதிலும் வைட்டமின் ஏ உள்ளது, ஸிங், புரதம் நிரம்பிய சிறப்புணவு,. வாரம் 1- 2 நாள் இதை சபபிடலாம்
இதயம்- தசைபகுதி மாமிசம். சொ.ஓ.கியு 10 ரிமபியது. இதயத்துக்கு இதமளிப்பது.ஸ்டடின் மத்திரை எடுப்பவர்கள், -ஹார்ட் பேசன்டுகள் சாப்பிடவேண்டிய பொருள் சி ஓ கியு 10 என்பதால் இதயம் அவர்களுக்கு மிக நலமளிப்பது
ரத்தம் - அனிமியா எனும் இரும்புசத்து குறைபாடு உள்லவர்கள் சாப்பிட அக்குறை நீங்கும். புரதமும், இரும்பும் அதிகம். கொழுப்பு குறைவு. ஆண்கள் இதை சாப்பிடும் அவசியம் பொதுவாக இல்லை
எலும்புகள்- தினமும் கூட இதில் சூப் சாப்பிடலாம்....எலும்புகளுக்கு நல்லது
மீன் தலை- கிட்டபார்வை உள்ளவர்களுக்கும், கண்னாடி அணிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நன்மையளிப்பது.
கோழிக்கால்- கால்சியம், கொலாஜன் நிரம்பிய அற்புத உணவு. பாலுக்கு மாற்ராக பருகலாம். ஆர்த்ரைட்டிசுக்கு மிக நல்லது
முட்டை ஓடு-- இது முழுக்க கால்சியமே. ஒரே ஒரு சின்ன துணுக்கு முட்டை ஓட்டை பொடியாக அரைத்து சாப்பிட்டால் ஒரு கப் பாலுக்கு சமம்.
அதே சமயம் இது ஓவர்டோசாகும் அபாயம் இருப்பதால் இதை பயன்படுத்தௌவதில் எச்சரிக்கை அவசியம்
-  Neander Selvan 

கெடோசிஸ்



கெடொசிஸ் ஆபத்தானது, மனிதர்களுக்கு க்ளுகோஸ் அவசியம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.
ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே பிறந்து வெறும் இரண்டு மணிநேரத்தில் கெடொசிஸுக்கு சென்றுவிடுகின்றன என்பது அவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே. அதன்பின் தாய்ப்பாலை நிறுத்தி திட உணவுகளை உண்ண துவங்கும் வரை குழந்தைகள் கெடொசிஸிலேயே இருக்கின்றன!!
பிரசவசமயம் எந்த தாயும் கெடொசிஸில் இருப்பதில்லை. அதனால் விவசாய காலகட்டத்தில் குழந்தைக்கு தாயின் பிளசெண்டாவில் வழியே கிடைக்கும் உணவானது சர்க்கரை நிரம்பிய உணவாகவே இருக்கும். அதே தாய் கெடொசிஸில் இருந்தால் சிசுவானது கருவிலேயே கெடொசிஸில் இருக்கும். விந்தையிலும் விந்தையாக சிசுவின் ஈரலே க்ளுகோனோஜெனெஸிசை நடத்தி கொழுப்பில் இருந்து சர்க்கரையை தயாரிக்கும் ஆற்றல் கொண்டதாக கருவிலேயே இருக்கும்.
ஆக பேலியோலிதிக் காலகட்டத்தில் கருவிலேயே கெடொசிஸில் இருந்த குழந்தைகள் ஏராளமாக பிறந்திருக்கும்
சரி..தற்போதைய நவீன காலகட்டத்துக்கு வருவோம். கர்ப்பிணிக்கு ஐஸ்க்ரீம் முதல் அல்வா வரை வாங்கிகொடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையுள்ள சமூகத்தில் கரு கெடொசிஸில் வளர்வது கிடையாது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு மணிநேரத்தில் அது கெடொசிஸுக்கு சென்றுவிடுகிறது. தாய்ப்பால் மட்டுமே அதற்கு கிடைக்கும்வரை அது கெடொசிஸிலேயே இருக்கிறது
பிறந்தது முதல் திட உணவுகளை உண்ணும் காலகட்டம் வரை மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான காலகட்டம் என்பதால் இயற்கை இக்காலக்ட்டத்தில் மூளை கீடோன்களில் இயங்குமாறு பணித்துள்ளது. திட உணவாக இறைச்சியும், முட்டையும் கொடுத்தால் கெடொசிஸ் தொடரும். ஆனால் நாம் குழந்தைக்கு ஊட்டுவதே சர்க்கரை அல்லது தேன் தான் என்பதால் கெடொசிஸ் அத்துடன் முடிவடைந்துவிடுகிறது.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகள் கெடொசிஸில் இருப்பார்கள் சரி..புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள்?
ஹா..ஹா..ஹா..ஹா
ஆக கெடொசிஸ் ஆபத்து, கெடொஜெனிக் டயட் ஆபத்து என்பவர்கள் ஆண்டவன் குழந்தைகளை கெடொசிஸிலேயே பிறப்பித்து வளரும் வண்ணம் அமைத்திருப்பதை அறிந்தால் ஆண்டவனையும் குற்றம் சாட்டினால் வியப்பில்லை- 

-  Neander Selvan 
:-)
Neander Selvan