Sunday, November 6, 2016

நாம் ஏன் குண்டாகிறோம்? எப்படி இளைப்பது?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
அதிக கார்ப் (மாவுச்சத்து-இட்லி/தோசை/சப்பாத்தி/சிறுதானியம்/போண்டா/etc.,)சாப்பிட்டால் அதிக இன்சுலின் சுரக்கும். இன்சுலின் ஒரு பஞ்ச கால ஹார்மோன். மனிதனுக்கு பூமியில் உணவு கிடைக்காத நேரத்தில், கையில் கிடைக்கும் உணவை உடலில் சேர்த்து வைப்பதற்காக பரிணாம வளர்ச்சியில் இது தோன்றியது.
கார்ப் உணவுகள் அதிகமாக சாப்பிட்டால், இன்சுலின் அவற்றை எடுத்து கிளைக்கோஜனாகவும் கொழுப்பாகவும் சேமித்து வைத்து நம்மை குண்டாக்கும். நாம் சக்திக்காக உண்ணும் உணவை, இன்சுலின் இப்படி திசைதிருப்பவதால், உடல் இயங்க சக்தி கிடைக்காது. அதனால் உணவு சாபிட்ட சில மணி நேரங்களில் மறுபடி பசி எடுக்கிறது. நாம் மறுபடியும் கார்ப் உணவுகள் எடுக்கிறோம்-->இன்சுலின் சுரக்கிறது-->குண்டாகிறோம்-->உடல் இயங்க சக்தி இல்லை-->மறுபடி பசி. இந்த சுழற்சியில் சிக்கி குண்டாகி, அத்துடன் சில சமயம் பிரஷர், சுகரை வரவழைக்கிறோம்.
நல்ல கொழுப்பு (பேலியோ டயட்) சாப்பிட்டால் வயிறு உடனே நிரம்புகிறது. இன்சுலின் சுரப்பதில்லை. சாப்பிட்ட உணவில் இருந்து உடலுக்கு சக்தி பெறப்படுகிறது. இன்னும் சக்தி தேவைப்பட்டால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைகிறது. உடற்பருமன் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. சுகரும், பிரஷரும் தான்.

No comments: