Sunday, November 6, 2016

நாம் ஏன் அதிக பசியுடன் இருக்கிறோம்?




Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
நாம் நம் தாத்தாக்களை விட அதிகமாக உண்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது நம் தவறு கிடையாது. நம் முன்னோர்கள் அதிக கொழுப்பு உண்டனர், ஆரோக்கியமாக இருந்தார்கள்.
1970களில் அமெரிக்க அரசாங்கத்தால் கொலஸ்டிரால் கெட்டது என்ற தவறான கொள்(ல்)கையால், நாம் கம்மி கொழுப்புள்ள தானியத்தை அதிகம் சாப்பிட ஆரம்பிக்க நேர்ந்தது.
கார்ப் (தானியம்) அதிகம் சாப்பிட்டால் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் பசியைத் தூண்டும் (ஏனென்றால் இன்சுலின் ஒரு பஞ்ச கால ஹார்மோன்). நாம் அதிகமாக சாப்பிடுவதற்கு காரணம், நமது இன்சுலின் அளவுகள் அதிகமாக இருப்பதே.
நாம் நம் முன்னோர்களை விட அதிகம் சாப்பிடக் காரணம் நாம் அவர்களை விட அதிக பசியுடன் இருப்பதாலேயே ஆகும். நம் தவறு இதில் இல்லை.
அதற்கு காரணம் முன்னெப்போதும் இல்லாததை விட நாம் தானியத்தை அதிகமாக நம்பி உண்பதே.
நல்ல கொழுப்பு கொஞ்சம் அதிகமாக உண்டு, கார்புகளை கம்மி செய்தால், நாம் நம் முன்னோர் போல் ஒபிசிடி, சுகர், பிரஷர், இதய வியாதி, ஆட்டோ இம்யூன் வியாதிகள் இல்லாமல் வாழலாம்.

No comments: